Posts

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை...

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை... கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு தினமும் சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து நன்றாகவே உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். Miracle Tree முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள்  வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. பல நோய்களுக்கு மருந்து  சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அது பற்றி சற்று விரிவாக காண்போம். சிறுநீரை பெருக்கும்  இது ஒரு சத்துள்ள கீரை. உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுந

வெண்பூசணிச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்கள்...

வெண்பூசணிச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்கள்... *அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில்  பருகி வருவதால் கிடைக்கும் நன்மைகள்: 1. சோம்பல் நீக்கி புத்துணர்வு கொடுக்கும். 2.மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்தும். 3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். 4.உடல் உஷ்ணத்தை குறைக்கும். 5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டு வலியைக் குறைக்கும். 6. உடலில் அமிலத்தன்மையை சமன் செய்ய பெரிதும் உதவுகிறது. 7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகி விடுமென்றும் குறிப்பிடுகின்றனர். 8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களையும் வெளியேற்றும். 9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற உதவுகிறது. 10. தூக்கமின்மைக்கு சி

மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட வலி மற்றும் வீக்கம் நீக்கும் கவிழ்தும்பை...

மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட வலி மற்றும் வீக்கம் நீக்கும் கவிழ்தும்பை... தண்டுவட வலி, மூட்டு இணைப்பு வலி... கவிழ்தும்பை முழு செடியாக எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, வெட்டிய சிறு துண்டுகளை  25 கிராம் அளவில்  500 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, 4ல் ஒரு பங்காக வற்றிய பின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்புகள் மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.  மூச்சுப் பிடிப்பிற்கு கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும்.  சிறந்த வலி நிவாரணி (வெளிப்பூச்சு) கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர் விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும்.  தசை எலும்பு வலிகளுக்கு (உள் மருந்தாக) வீக்கம் வற்றும். நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து,

முகத்திலும் கை, கால்களில் உள்ள பூனை முடிகளை முழுமையாக நீக்க...

முகத்திலும் கை, கால்களில் உள்ள  பூனை முடிகளை முழுமையாக நீக்க... பூனை ரோமம் போயே போச்சு! பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம் ஆனால் அதுதான் ஒரு பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும்.  கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை.  என்னதான் முகம் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக் கொண்டே வாழும் பெண்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள். பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக்கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குவார்கள். ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வெளியே போக யோசிப்பார்கள்.  இதற்காக கடைகளில் விற்கிற ஹேர் ரிமூவிங் கிரீம்களைப் பயன்படுத்தினால் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும்.  கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பூசி பூனை ரோமத்தை நீக்குவதால் அப்போதைக்கு மட்டும்தான் தீர்வு கிடைக்கும். அதிலும் இந்தக் க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் கெமிக்கல் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தி ரோமங்கள் நீக்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது. அ

மஞ்சணெத்தி என்றழைக்கப்படும் நுணா மருத்துவம்...

பல் சம்பந்தமான நோய்களை விரைவில் குணப்படுத்தும் நுணா: நுணா வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இலை, காய், பழங்கள், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும். மாத விலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும். நுணா இலை நடுவிலுள்ள ஈர்க்குகளை எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி, துளசி, மிளகு, சுக்கு முதலியவற்றை சேர்த்து கஷாயமாக வடித்து குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப கால், அரை சங்கு அளவாக விட்டுவர மந்தபேதி நிற்கும். நுணா இலையை அரைத்து புண், சிரங்குகளுக்கு வைத்து கட்ட விரைவில் குணமடையும். இதன் இலைச்சாறை எடுத்து இடுப்பு வலிக்கு பூச ஆறும். பூத  கரப்பான் பட்டை, பூவரசம் பட்டை, நுணாப்பட்டை, இலுப்பைப் பிண்ணாக்கு இவைகளை சமனெடையாக சுட்டு கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்து பூச  கரப்பான் நீங்கும். புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். நுணா காய்களை ஒரு கிலோ அளவிற்கு சேகரித்து சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 250 கிராம் அளவு கல்உப்பு சேர

சேற்றுப் புண்ணுக்கு மருதாணி பூச்சு!

சேற்றுப் புண்ணுக்கு மருதாணி பூச்சு!... சொறி, சிரங்கு, அரிப்புனு சில பேர் படாத பாடுபடுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு சில வைத்தியங்களைச் சொல்றேன் கேட்டுக்கோங்க. இதைப் படிச்சு முடிச்சதும், 'அட, ஏற்கெனவே இதே நோய்களுக்கு வேற வேற வைத்தியம் சொல்லியிருந்தாங்களே'னு நினைக்கத் தோணும். அது ஒரு வகை வைத்தியம்... இது ஒரு வகை வைத்தியம். அவ்வளவுதான். பூவரசு மரம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மரத்துல புல்லுருவினு ஒரு கொடி வளரும். அந்தக் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கிடுங்க. அதோட சின்னதா ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து மையா அரைச்சிக்கோங்க. எந்தெந்த இடத்துல ஊறல், சொறி, சிரங்கு இருக்கோ அங்கெல்லாம் அதைப் பூசணும். மூணு மணி நேரம் கழிச்சு குளிச்சிரலாம். பூவரசம் பூ, இல்லைனா... பூவரசம் காய் எடுத்துக்கோங்க (ரெண்டையும் சேர்த்தும் அரைக்கலாம்). அதோட மஞ்சள் துண்டு சேர்த்து அரைச்சு, சிரங்கு உள்ள இடமெல்லாம் பூசிரணும். மூணு மணி நேரம் கழிச்சு, பாசிப்பயறு மாவு தேய்ச்சுக் குளிக்கணும். மேலே சொன்ன ரெண்டு வைத்தியத்தையும், ஒரு மண்டலத்துக்குக் கடைபிடிச்சா... நல்ல குணம் கிடைக்கும். கொன்றை மலர் கேள்விப்பட்டிருப்பீங்

தலைமுடி கருப்பாக மாற டிப்ஸ்.:

தலைமுடி கருப்பாக மாற டிப்ஸ்... * தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும். * நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, தலை சருமத்தில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறையும். * கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். * வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை கழுவியோ வந்தால், நரை முடி மறையும். * நெய் கூட இள நரையை மறைய வைக்கும். அதற்கு நெய்யை தலை சருமத்தில் படும்படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று