Posts

Showing posts with the label Sciatica

சியாட்டிகா என்றால் என்ன, சியாட்டிகா அறிகுறிகள்

  கால் நரம்பை இழுக்கும் சியாட்டிக்கா பிரச்னை...   “சியாட்டிக்கா” (Sciatica) ... கேட்பதற்கு வேடிக்கையான, புதிதான ஒரு வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்சினை ஏற்படுத்தும் வலி வார்த்தையில் அடக்க முடியாதது. ‘கால் திடீர்னு மரத்துப்போகுது... தொடைப்பகுதியில இருந்து சுளீர்னு ஏதோ ஒண்ணு இழுக்குற மாதிரி வலி, குதிங்கால் வரைக்கும் நீளுது’ என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள். 40 வயதைத் தாண்டிய பெண்கள்தான் இந்த சியாட்டிக்காவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். “சியாட்டிக்கா” என்பது, முதுகில் ஆரம்பித்து, காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலில் உள்ள நரம்புகளிலேயே, மிக நீளமான ஒற்றை நரம்பு சியாட்டிக்காதான். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், கால் வலுவிழப்பது, சோர்வு, உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அண்மைக்காலமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்சினைக்கு ஆளாவது அதிகமாகியிருக்கிறது. கால் மரத்துப்போவது இதன் மிக முக்கியமான அறிகுறி. இந்தப் பிரச்சினை இருப்பதை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம். பிரச்சினையின் வீரியத்தைப் பொறுத்து, சிகிச்சை

முதுகு தண்டுவட பிரச்சினைகளுக்கு பிரண்டை உப்பு

Image
கழுத்து எலும்பு தேய்மானமும் (Cervical Spondalytis), இடுப்பு எலும்பு தேய்மானமும் (Lumbar Spondalytis) Home பிரண்டை உப்பு                          Pirandai Salt   கழுத்து எலும்பு தேய்மானமும் (Cervical Spondalytis), இடுப்பு எலும்பு தேய்மானமும் (Lumbar Spondalytis) நம்முடைய வாழ்வியல் மாற்றத்தால் ஏற்பட்ட நோய்களில் ஒன்றாகும் ...  குனிந்து நிமிந்து வேலை பார்த்த நமது பாட்டன்களுக்கு முதுகு தண்டு வடத்தில் எந்த வலியும் (Spondalysis) வரவில்லை , கூனும் விழுகவில்லை ... தலையில் இரண்டு மூன்று தண்ணீர் பானை வைத்து சுமந்த நம் பாட்டிகளுக்கு கழுத்தில் வலி (Cervical Spondalysis) வரவில்லை ...     ஆனால் இன்று கழுத்து எலும்புகளுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல், தலையில் ஒரு சிறு எடையையும் தூக்காதவர்களுக்கு கழுத்து எலும்பு தேய்மானம் இருப்பதாக சொல்லுகிறார்கள்.   யார் ஒருவர் கழுத்தை அசையாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே கழுத்து வலி , Spondalysis வருகிறது ... தலையில் அதிக எடையை தூக்கி வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு கடைசி வரையில