வெண்பூசணிச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்கள்...

வெண்பூசணிச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்கள்...

*அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில்  பருகி வருவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. சோம்பல் நீக்கி புத்துணர்வு கொடுக்கும்.

2.மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்தும்.

3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.

4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டு வலியைக் குறைக்கும்.

6. உடலில் அமிலத்தன்மையை சமன் செய்ய பெரிதும் உதவுகிறது.

7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகி விடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.

8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களையும் வெளியேற்றும்.

9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற உதவுகிறது.

10. தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.

11. மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். இரத்த விருத்தியைத் தரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆண்மை விருத்திக்கும் நல்ல மருந்து.