Posts

உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற உதவும் வெற்றிலை.

உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும் வெற்றிலை. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலை போடுவதை, ` தாம்பூலம் தரித்தல் ’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கிவிடும். தேள் கடி விஷத்திற்கு தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதே போல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். கொழுந்து வெற்ற

ஆனை நெருஞ்சில் மருத்துவம்

ஆனை நெருஞ்சில்   ஆனை நெருஞ்சிலின் மருத்துவ பயன்பாடுகள் மலட்டுத்தன்மை, வெள்ளை வெட்டை, மூட்டு அழற்சி விந்தணுக்கள் பெருக மற்றும் சிறுநீர் பெருக்கும் மூலிகை.  நெருஞ்சில் விதை மூலிகை சேர்த்த நெய்.  குழந்தை வரம் தரும் நெருஞ்சில்,  பாலியல் பிரச்சனைகள், பூப்படையாத பெண்கள்  பூப்படைய,  கருப்பை கோளாறுகள், வெட்டை நோய் வீரிய விருத்தி, ஆண்மை அதிகரிக்க  கர்ப்பிணி பெண்களின் சிறுநீர் பிரச்சினை, சிறுநீரில் ரத்தம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கல் அடைப்பு கண்ணில் நீர் வடிதல் மஞ்சள் காமாலை மாதவிடாய்  இரத்தப்போக்கு  ஆனை நெருஞ்சிலின் பொதுவான குணங்கள்: சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் 'டானிக்', குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும். நெருஞ்சில் மருத்துவ குணம் மற்றும் பயன்படும் பாகங்கள்: சதைப் பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்

தழும்புகள் மறைய கொத்துமல்லி மருத்துவம்...

கொத்த மல்லி மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்... வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும். தழும்புகள் மாற கொத்த மல்லிக் கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும். பருக்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும். கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும். கட்டிகள் கரைய கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும். இரத்த பித்தத்திற்கு கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும். கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது.

காளானில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்...

காளானில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்... 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். மூட்டு வாதத்திற்கு காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோய்க்கு தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து  100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். வயிற்றுப்புண், ஆசனவாய்ப் புண்ணிற்கு நிவாரணம் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்

உடல் வலி எல்லாம் பறந்து போக...

உடல் வலி எல்லாம் பறந்து போக... நாட்டு கருவேல மரத்தின் பச்சைக் காய்களை 100 கிராம் அளவில் சேகரித்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு விழுதாய் அரைத்துக் கொள்ளவும். சுத்தமான செக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து அடுப்பிலேற்றவும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். தண்ணீர் எல்லாம் நன்கு வற்றி வண்டல் பதம் வந்த பின்னர் இந்த தைலத்தை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்...      இந்த தைலத்துடன் மறுபடியும் 20 கிராம் தேன் மெழுகு சேர்த்து நன்கு காய்ச்சவும். மறுபடியும் தைல பதத்தில் இறக்கிவிடவும். இந்த எண்ணெயை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்தால், உடல் வலியெல்லாம் பறந்து போகும். உடைந்த எலும்புகளைக்கூட ஒன்று சேர்க்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு. இதே எண்ணெயை தலைக்குத் தேய்த்தால் முடி கருமையாக வளரும்.

சரும சுருக்கம் வராமல் தடுக்க...

சரும சுருக்கம் வராமல் தடுக்க... 35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப் பார்க்க தொடங்கி விடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா? என்று சிந்திக்கவும் வைத்து விடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம். ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்: அத்துடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது, கடந்தகால, எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும். இத்தகைய வாழ்வியல் முறையுடன் கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து, வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதும் சரு

ஆங்கில மருந்துகளால் வரும்பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) குணமாக…

ஆங்கில மருந்துகளால் வரும் பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) குணமாக… பெரிய நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளும் போது சில மருந்துகளின் ஒவ்வாமையினால்  ALLERGY... நாக்கில் புண்,  நாக்கு வெடிப்பு,  தொண்டைப் புண்,  மூக்கிலிருந்து ரத்தம் வடிதல்,  வயிற்று வலி,  உடல் சில்லிட்டு போதல்,  வாந்தி, பேதி  போன்ற பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) உண்டாகலாம். இத்தகைய குறைகளுக்கு அருகம்புல்லை மிஞ்சிய மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி அருகம்புல்லையும் ஐந்து மிளகையும் சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து இரண்டில் ஒரு பங்காக வற்ற வைத்து அதிகாலையில் ஒரு டம்ளர் அருந்த மேற்கண்ட பக்கவிளைவுகள் எல்லாம் தீரும்.