Posts

Showing posts with the label சோரியாஸிஸ் குணமாக

சொரியாசிஸ் நாட்டு மருத்துவம், சொரியாசிஸ் பாட்டி வைத்தியம்

  சோரியாஸிஸ்க்கான வீட்டு வைத்தியங்கள் சரும நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சோரியாஸிஸ்தான். சோரியாஸிஸ் என்பது சருமத்தில் சில இடங்களில் மட்டும் திட்டுத்திட்டாக தடிப்பது. இந்த இடங்கள் வறண்டு போவதுடன் தனியாக தெரியும். இதில் உள்ள மற்றொரு பிரச்சினை இது ஒரு இடத்தில் வந்துவிட்டால் தொடர்ந்து அருகில் உள்ள இடங்களுக்கு பரவும். ஆனால் சோரியாஸிஸ் மற்றவர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்டவரின் உடலில் மட்டுமே பரவக்கூடியது. Remedies for Psoriasis சோரியாஸிஸ்-ஐ உடனடியாக சரி செய்ய இயலாது, ஆனால் சில மூலிகைகள் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம். சோரியாஸிஸ்க்கு எந்த மருந்தை உபயோகப்படுத்துவதாய் இருந்தாலும் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் தவறான சோரியாஸிஸ் சிகிச்சை பல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். இங்கே சோரியாஸிஸ்க்கான சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம். சோற்றுக் கற்றாழை கற்றாழை சாறை தினமும் மூன்றுமுறை சருமத்தில் தடவுவது சோரியாஸிஸ்க்கு சிறந்த சிகிச்சையாகும். இது தடித்த பகுதிகளில் உள்ள சிவப்பு நிறத்தையும், அரிப்பையும் குறைக்குமென ஆய்வுகள் கூறுகிறது.

சொரியாசிஸ் என்றால் என்ன, சொரியாசிஸ் எதனால் வருகிறது

  சோரியாஸிஸ் ( PSORIASIS ) என்றால் என்ன?   இன்றைய மாறிவரும் சூழலில் சோரியாஸிஸ் நோய் பரவலாக காணப்படுகிறது. ஆனால் இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. சோரியாஸிஸ் எனும் தோல் நோய் தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது.   இந்த நோய் வந்தால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறட்சி கண்டு செதில் செதிலாக உறிந்து கொண்டு வரும். வரலாற்று காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன.   எகிப்தின் மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த காலகட்ட மக்களுக்கும் இந்த சோரியாஸிஸ் இருந்ததை அறிய முடிகிறது.   “மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாஸிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார். கிபி 2-ம் நூற்றாண்டில் கேலன் எனும் மருத்துவர் சோரியாசிஸிற்கு மருந்தாக வைபர் எனும் பாம்பின் சூப்பை தடவ வேண்டும் என்று கூறியுள்ளார். பின்பு இந்த இருபது நாற்றாண்டுகளில், இந்த சோரியாஸிஸ்-க்கு பல மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. நாய் மற்றும் பூனையின் சாணம், வாத்து எண்ணெய், விந்தணுவை பூசுவது, சிறுநீருடன் வெங்காயம் மற்றும் உப்பை கலந்து பூசுவது போன்ற பல மரு

வெட்பாலை தைலம் பயன்கள், வெட்பாலை இலை எங்கு கிடைக்கும், வெட்பாலை செடி கிடைக்கும் இடம், வெட்பாலை மரம் எப்படி இருக்கும்

  வெட்பாலை-Psoriasis Cure Tree   இது தமிழகமெங்கும் காணப்படும் மரம். இதன் இலையை ஒடித்தால் பால் வரும். சிற்றூர்களில் இதை, ‘பாலாட்டாங் குலை’ என்று சொல்வதுண்டு. மலைக்காடுகள் தொடங்கும் இடங்களில் இவை அதிகமாகக் காணப்படும். மற்ற இடங்களிலும் பரவலாகப் புதர்களாகக் காணப்படும் குறுமரம் இது. அப்படியே வளரவிட்டால் மிக உயரமாக வளரும். என் அனுபவத்தில் 50 அடி உயர மரங்களைக்கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதனுடைய கட்டை மிகவும் வலுவற்றது. கடைசல் பொம்மைகள் செய்யப் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்ப, பல்வலி நீங்கும். ஆனால், இது நிரந்தரத் தீர்வல்ல. இதன் இலைகளைக் கிள்ளினால் வரும் பாலை, ஓரிரு துளிகள் பாலில் விட, பாலிலுள்ள வெண்ணெய் தனியாகப் பிரிந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் வாழும் இருளர் இன மக்களிடமிருந்து ஒரு மருந்துத் தயாரிப்பு முறை பெறப்பட்டு, இன்று சித்த மருத்துவர்களிடையே மிகவும் பயன்பட்டுவருகிறது. அதுதான், ‘ வெட்பாலைத் தைலம் .’ இதன் தயாரிப்பு மிகவும் எளிதானது. அடுப்பின் அருகிலேயே செல்லாமல் ‘ சூரியப் புடம் ’ என்று சித்த மருத்துவம் கூறும் முறையில் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. சூரியனின் வெம்மை