ஆரோக்கியம் நிறைந்த அற்புத உணவு கூழ்

ஆரோக்கியம் நிறைந்த அற்புத உணவு கூழ்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit


அதிக அளவு தண்ணீர் சேர்த்து, உணவு பொருள் குறைவாய் கலந்து செய்யப்படும் கூழ் குறைந்த செலவில் அதிக நபர்களின் பசியை தீர்க்கும் அமிர்தமாகும்.

ஆரோக்கியம் நிறைந்த அற்புத உணவு கூழ்தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். கேழ்வரகு, கம்பு போன்றவற்றின் கூழ்தான் முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இருந்தன. நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர்.


கூழ் என்பது கம்பு மற்றும் கேழ்வரகு மாவில் தயாரித்து கூழ் நிலையில் வழங்கப்படும் உணவு. அதிக அளவு தண்ணீர் சேர்த்து, உணவு பொருள் குறைவாய் கலந்து செய்யப்படும் கூழ் குறைந்த செலவில் அதிக நபர்களின் பசியை தீர்க்கும் அமிர்தமாகும். ஒரு செம்பு கூழ் குடித்து காலையில் வேலைக்கு செல்லும் விவசாயி, நாள் முழுவதும் களைப்பின்றி விவசாய பணியை மேற்கொள்வான்.



கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

அன்றாட உணவாக தினசரி கூழ் குடித்த மக்கள் இன்று தங்களின் நோய்களை தீர்க்கும் மருந்தாக உட்கொள்கின்றனர். ஆம், சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தல் வேண்டி தினம் காலையில் கேழ்வரகு கூழ், களி, ரொட்டி போன்றவை செய்து சாப்பிடுகின்றனர். கூழ் குடிப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது. உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதில்லை. வயிற்றுக்கு வலு அளிக்கிறது. கேழ்வரகில் கால்சியம் சத்து அபரிமிதமாக உள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலுவை தரக்கூடியது.

கேழ்வரகு மாவை அரை கிலோ எடுத்து கொஞ்சம் தயிர் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கட்டி பிசைந்து புளிக்க வைக்கவும். மறுநாள் காலை 200 கிராம் பச்சரிசி நொய்யை பாத்திரத்தில் தண்ணீர் விட்ட வேக வைக்கவும். நொய் நன்கு வெந்தவுடன் அதில் புளிக்க வைத்த கேழ்வரகு மாவை ஊற்றி நன்கு கிளறவும். அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருத்தல் வேண்டும். மாவு வெந்தவுடன் இறக்கி வைக்கவும். இதனை ஒருநாள் முன்பு செய்து வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இல்லையெனில் காலையில் செய்தவுடனேயும் பயன்படுத்தலாம்.

தயார் செய்த கூழில் உப்பு, தண்ணீர், தயிர், சின்ன வெங்காயம் போட்டு நன்கு கலந்து குடிக்க வேண்டியது தான். கூழுக்கு கருவாட்டு குழம்பு, மாங்காய் போன்றவை சிறப்பு இணை உணவாக உள்ளன. “கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்” என்று ஓர் பழமொழியே உள்ளது.


தினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!


தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பலர் அதிக வெப்பத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். குறிப்பாக நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்படுவார்கள்.

இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பானங்கள், மருந்துகள் எல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

தானிய வகைகளுள் ஒன்றான் கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதில் 15% புரோட்டீன் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன.


இப்போது கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் கண்ட உணவுகளை உட்கொள்ளாமல், கம்மங்கூழைத் தயாரித்துக் குடியுங்கள். முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.


உடல் சூடு குறையும்

வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.


இரத்த சோகை நீங்கும்

கம்புவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த செல்களின் உற்பத்திக்கு அவசியமான ஓர் முக்கிய சத்தாகும். இந்த கம்மங்கூழை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது இரத்த சோகையை சரிசெய்யும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க நினைத்தால், கம்மங்கூழை தினமும் குடித்து வாருங்கள்.


கரோனரி இதய நோய்

கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இது இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.


வைட்டமின் பி

கம்புவில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவும். இது இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைத்து, கொலஸ்ட்ரால்கள் உடலில் படிவதைத் தடுக்கும். கம்புவில் உள்ள நியாசின் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் தேங்குவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.


உடல் எடை குறையும்

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவும். மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்.

 
குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்


கம்புவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.


உயர் இரத்த அழுத்தம்

கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். அதாவது இது இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் கம்பு தீவிரமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.


சர்க்கரை நோயைப் பராமரிக்கும்

கம்புவில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.


நல்ல தூக்கம்

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.


மாதவிடாய் கால வலிகள்

கம்புவில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம். எனவே நீங்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தால், தினமும் காலையில் கம்மங்கூழைக் குடித்து வாருங்கள்.


எலும்புகள் வலிமையாகும்

கம்புவில் கால்சியம் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.


  மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...