க்ரீன் டீ நன்மைகள்


                                  க்ரீன் டீ நன்மைகள்




       பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                  Bael Fruit
  



க்ரீன் டீ என்றவுடன் என்னுடைய ஞாபகத்தில் வருவது என்னுடைய சொந்த அனுபவத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள்தான்…

என்னுடைய நண்பரின் அண்ணன் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர், என்னிடம் பெரும்பாலும் ஆரோக்கியத்தை பற்றிய விஷயத்தை பற்றி மட்டுமே பேசுவார், எப்போதும் Health Conscious-உடனே இருப்பார். அவருக்கு அந்த சமயத்தில் இருந்த பிரச்சினை என்னவென்றால் அவருடைய காலில் இருந்த ஒரு பந்து அளவிலான கொழுப்புக் கட்டி இருந்த காரணத்தினால் அவரினால் பணிக்கு செல்லும்போது கூட ஷூ அணிய முடியாது. இந்த கொழுப்பு கட்டி பிரச்சினைக்கு அவர் என்னிடம் கேட்ட மருத்துவம் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த கொழுப்புக் கட்டியை கரைக்க வேண்டும் என்பதே…

       நானும் அவரிடம் கண்டிப்பாக சரி செய்ய முடியும், நான் சொல்லும் மருத்துவத்தை 6 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லி, தினமும் இரண்டு முறை க்ரீன் டீயும், இரண்டு முறை இலவங்கப்பட்டை காப்பியும், இரவில் திரிபலா சூரணமும் சாப்பிட்டு வரச் சொன்னேன். ஆச்சரியமான முறையில் 5,6 மாதங்களில் அவருடைய பந்து அளவிலான கொழுப்புக் கட்டி முழுவதும் மறைந்து தோலோடு தோலாகி விட்டது.

       இரண்டாவது சம்பவம், இது என் குடும்பத்திலேயே பல வருங்களுக்கு முன் நிகழ்ந்தது. என்னுடைய அம்மா சற்று குண்டாகவே இருப்பார்கள். சிறிது தூரம் தொடர்ந்து நடந்தால் காலில் வலி உண்டாகிறது என்றும், சற்றுநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு நடந்தால் நடக்க முடிகிறது என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட தினத்தன்று அருகில் உள்ள தெரு வரைக்கும் நடந்து சென்றவர்களால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நடக்கவே முடியாமல் வலியில் சுருண்டு உட்கார்ந்து, அருகில் இருந்தவர்கள் அம்மாவை வீடு வரையிலும் கொண்டு வந்து விட்டு போனார்கள். எனக்கு என் அம்மாவை பார்த்தவுடன் பிரச்சினை என்னவென்று புரிந்தது, அதாவது நரம்பு, இரத்த நாளங்களில் முழுவதுமாக அடைப்பு உள்ள நிலை.

       நான் என் அம்மாவிடம் கேட்டது, இந்த பிரச்சினையை சித்த வைத்திய முறையிலேயே சரி செய்யலாம், ஆனால் சிறிது நாட்கள் பிடிக்கும். அப்படி இல்லாவிட்டால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ட்ரிப்ஸ், ஊசி மருந்துகள் அதற்கு மேலும் அறுவை சிகிச்சை வரை போனாலும் போகும். எது உங்கள் விருப்பம் என்று கேட்டேன், என்னுடைய அம்மா தாமதமானாலும் பரவாயில்லை சித்த வைத்தியமே போதும் என்று கூற, சிகிச்சை ஆரம்பித்தது…

       அடுத்த வந்த நாட்களில் ஒரு நாளைக்கு 3,4 க்ரீன் டீயும், 3,4 முறை இலவங்கப்பட்டை காப்பியும், காஞ்சனாரு குக்குலு மாத்திரை காலையில் இரண்டும், மாலையில் இரண்டும், இரவில் திரிபலா சூரணம்…   அவ்வளவுதான் மருந்துகளே…  சுத்தமாக நடக்கவே முடியாத நிலையில் இருந்த அம்மா அடுத்த 15வது நாளிலேயே மெதுமெதுவாக நடக்க ஆரம்பித்து விட்டார்….

       இந்த அளவிற்கு வேகமான முறையில் கொழுப்பை கரைக்கக்கூடிய இந்த க்ரீன் டீயை இதனுடன் பால், சர்க்கரை எதுவும் சேர்க்காமல் சூடாக அருந்துவதே சாலச் சிறந்தது…
இப்படிப்பட்ட க்ரீன்டீ இதன் மருத்துவ குணத்தால் இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்று வருகிறது. அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…


க்ரீன்டீ
பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப்படுத்தப்படும் தேயிலைதான் க்ரீன்டீ என்பது.

க்ரீன்டீக்கு எதனால் இந்த மகத்துவம்?
கேட்சின் கோலிபெனல்ஸ் (CatechinColyphenois)-தான் க்ரீன்டீயின் மெயின் விஷயம்... அதாவது பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் மிகச்சிறந்த நோயெதிர்ப்புச் சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

கேன்சருக்கு மிக நல்லது!
கேன்ஸர்: பொதுவாக கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேஷன் கதிர்வீச்சுதான் மெயின். இந்த ரேடியேஷன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால், இந்தக்ரீன்-டீகேன்சர் செல்களை மட்டும் கொல்கிறது. காரணம் அதன் கேட்சின் கோலிபெனல்ஸ்தான் என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்டாக மருத்துவர்கள் க்ரீன்டீயை பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடுங்காலம் தொடர வேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீனமக்களின் ஸ்லிம் ரகசியம்!
காலம் காலமாக சீனமக்கள் விரும்பிக் குடிக்கும் டீ இந்த க்ரீன்டீ!  சீனர்கள், பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். குட்டி குட்டியாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்களுக்கு தினமும் அடிக்கடி க்ரீன்டீ பருகும் பழக்கமும் இருப்பதால், இந்த க்ரீன்டீ கெட்ட கொழுப்பை இவர்கள் உடம்பில் அறவே சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பு நீக்கும்!
பொதுவாகவே நாம் சாப்பிடும் சமூசா,  பீட்ஸா,  வடை,  சிக்கன் 65  போன்ற ஜங்க்ஃபுட், ஆயில் ஃபுட்களாலும், ஸ்வீட்ஸ்களாலும் இப்படி தவறான உணவுப்பழக்க முறையால் உண்டாகும் கெட்ட கொழுப்பினால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது ஹார்ட் அட்டாக் வரை கூட போகும். இந்த இரத்தநாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்கிறது இந்த க்ரீன்டீ.

மூட்டுப் பிரச்னைகள்,  ஹைப்ளட்ப்ரஷர்,  இதயநோய்கள்
தொடர்ந்து க்ரீன்டீ பருகி வந்தால் மேற்கண்ட அத்தனை பிரச்னைகளும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகிறது.               
                                                                                                                                                      
சளி, ஜுரம் வராது
அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி, ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களை தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடகொல்கிறது க்ரீன்டீ தரும் எதிர்ப்புச்சக்தி.

உடல்நடுக்கம்                                                                                               சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து போவதால் உடல் நடுக்கம் இருக்கும். நல்லசெல்களை உருவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது இந்த க்ரீன்டீ

எடை குறைக்க விரும்புகிறீர்களா?                                                                                                                                க்ரீன்டீயைப் பருகுவதால்  Fat Oxidation thermogeniuesis எனப்படும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப்படுகிறது. எனவேதான் உடல்எடையைக் குறைக்க விரும்புபவர்கள் க்ரீன்டீயை அடிக்கடி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்                                                      .
டயபடீஸ் இருக்கா உங்களுக்கு?
நல்ல டயட்,  உடற்பயிற்சி,  மனஅழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன்டீயும் பருகிவந்தால் சுகர் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும், செரிமானத்துக்குப்பின் குளுகோஸாக மாறி ரத்தத்தில் சேராதபடி க்ரீன்டீ தடுக்கிறது.


க்ரீன்டீ'க்கு நிகரில்லை
என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ போன்ற ஜீரணசக்திப் பொருட்களை சேர்த்திருந்தாலும் கூட உணவுக்குப்பின் க்ரீன்டீ பருகுவதற்கு எதுவுமே நிகரில்லை. ஜீரண சக்தியை அந்தளவுக்கு தூண்டிவிடும். உடனடியாக கெட்ட ¦¸¡ழுப்பையும் நீக்கும்.


தொடர்புக்கு...
For Contact...