Posts

நினைவாற்றல் பெருக... சரஸ்வதி....

நினைவாற்றல் பெருக... சரஸ்வதி.... திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி செய்து, அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப் பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், மாலையிலும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். அமுக்கிராங் கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தால்... நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட வேண்டும்.  தேவைப்பட்டால் சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம். சரஸ்வதி மூலிகை கலவை   வல்லாரைப் பொடி 200 மி.கி. அளவோடு, வசம்பு  200 மி.கி. (பெயர் சொல்லாதது), வெந்தயப் பொடி-500mg,

மூலிகை பற்பொடி

இயற்கையான மூலிகை பற்பொடி செய்முறை: தேவையானவை: கடுக்காய் - 100 கி தான்றிக்காய் - 100 கி நெல்லிவற்றல் - 100 கி வால் மிளகு - 150 கி கிராம்பு - 20 கி,  ஏலக்காய் - 10 கி இந்து உப்பு -20 கி நாயுருவி வேர்-20 கி நெல் உமி - 20 கி,  எள்ளு - 10 கி துளசி (உலர்ந்தது)  - 20 கி,  புதினா (உலர்ந்தது) - 20 கி பச்சை கற்பூரம்- 10 கிராம் செய்முறை:  கடுக்காய், தான்றிக்காய் இரண்டையும் விதை நீக்கி தோலை எடுத்துக் கொள்ளவும்.  மற்ற அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காய வைத்து, பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்தால், இயற்கை பல்பொடி தயார்.

குங்குலியம் (நாகலிங்க மரம்) மருத்துவ பயன்கள்:

குங்குலியம் (நாகலிங்க மரம்) மருத்துவ பயன்கள்: ஷோரா ரோபஸ்டா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த குங்குலியம் மரம் பற்றி கேள்வி பட்டிருக்கீறீர்களா? இதில் நிறைய மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன. இந்த மரம் பொதுவாக இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. இதை நன்மைகளின் இருப்பிடம் என்றே கூறலாம். இதன் இலைகள், எண்ணெய் ஏன் தண்டு கூட நமக்கு நிறைய விதங்களில் பலனளிக்கிறது. அதனால் தான் இதை ஆண்டு ஆண்டு காலமாக மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குங்குலியம் மரத்தின் நன்மைகள் பற்றி தற்போது காணலாம். கிருமிகளை அழிக்கிறது இந்த குங்குலியம் மரம் நமது உடலில் உள்ள கிருமிகளை, பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது. எனவே இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்க கூடியது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தொற்றுக்கு சிகிச்சை இது நமது உடலில் ஏற்படும் தொற்று நோய்க்கு தீர்வளிக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் தொற்றக் கூடிய நோய்களை தடுக்கிறது. தொற்று நோய்க் கிருமி களுக்கு எதிராக செயல்பட்டு சீக்கிரம் தொற்றை போக்குகிறது. காயங்களை ஆற்றுகிறது உடம்பில் ஏற்படும் காயங்களை எளிதாக குணமாக்க

குங்குமாதித் தைலம்

குங்குமாதி தைலம் என்பது என்ன?   ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை   மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட, வேறு எது சிற்ப்பாக இருக்க முடியும. ஆமாம்- இது போன்ற ஒரு பொருள் உண்மையில் இருக்கிறது, அது குங்குமாதி தைலம் என்று அழைக்கப்படுகிறது.   குங்குமாதி தைலம் என்பது என்ன? தென்னிந்தியா முழுவதும், குறிப்பாக கேரளாவில் ஒரு பொதுவான வீட்டு பெயரான ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய், குங்குமாதி தைலம் குங்குமப்பூவிவிருந்து உருவாக்கப்படுகிறது. இந்த எண்ணெயின் முக்கிய மூலப்பொருள் குங்குமப்பூ, இது   சருமத்தின் நிறம் மற்றும் அமைப்பை மேம்படுத்த தனிப்பட்ட குணத்தைக் கொடுக்கிறது. இந்தத் தைலம், முக சருமத்தின் மீது   அதிசயங்கள் செய்யும்   பல பொருட்களுடன் சேர்த்து, சந்தனம்,தாமரை மற்றும் மஞ்சள் கொண்டிருக்கிறது இங்கே இந்த தைலம் செய்யும் பல முக்கிய செயல்களில் சில:   நிறத்தை அதிகரிக்கிறது குங்குமாதி தைலத்திலிருக்கும் காவி, பாக

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ?

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ? கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள் போன்றவை அடங்கியுள்ளது. இதைபோல கேரட் ஜூஸை தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும் ஏற்படும். அந்த வகையில் கேரட் ஜூஸை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம். கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள். கேரட் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும். கேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும். இர

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி..

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி.. அன்றைய காலக்கட்டத்தில், குடும்பம் என்றால் அது மிகப் பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. கோடை விடு முறை வந்தால் தாத்தா பாட்டிகளின்  ஊருக்கு செல்வதே ஒரு தனி கொண்டாட்டம் தான்.  நகரத்தின் இரைச்சலில் இருந்து, கிராமத்தின் அமைதி ஏகாந்தமாக இருக்கும்.  இங்கு தினமும் இரவு எட்டு மணியானாலே ஊர் அடங்கிவிடும்.  ஆனால் கிராமங்களிலோ, கோடைக் காலத்தில் பெரும் பாலான வீடுகள் விடுமுறையைக் கழிக்க வந்த விருந்தினர்களால் நிறைந்திருக்கும் என்பதால், இரவானாலும் வீதியே திருவிழா போல இருக்கும். பாட்டிமார்களும் வராது வந்த தங்கள் பேரப் பிள்ளைகளுக்கு தினம் ஒரு பலகாரம் செய்து தருவார்கள். அத்தனையும் உடல் சூட்டை தணித்து ஆரோக்கியம் கொடுக்கும் பலகாரமாகத்தான் இருக்கும். கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், களி, அரிசி பயத்தங் கஞ்சி, மோர், இனிப்புத்  தயிர் என்று பட்டியல் நீளும். இந்த இனிப்புத் தயிர்தான் இன்று லஸ்ஸி என்றழைக் கப்படுவது.   குழந்தைகளுக்கும், பெண்களுக்கும்  ஏற்படும் சிறுநீர்க்கடுப்பு, உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் அருமையான, ஆரோக்கியமான  உணவு இது.  கருப்பட்டி வெந்தயக் கஞ்சி எப்படித் தயாரிப்பது

குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பது சரியா? தவறா?

0-2 மாத குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது…    👉 பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள்... பசும்பால் சிறிய குழந்தைகளுக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.  👉 ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும்பாலை செரிமானம் செய்ய முடியாது.  👉புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு பிரச்னையும் கூட வரக்கூடும்.  👉பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள், குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.  👉பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால், குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும், விட்டமின் சி, இ, காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம்.  👉பசும்பாலில் உள்ள புரோட்டீன், குழந்தையின் செரிமான மண்டலத்தைப் ப