மலச்சிக்கல் நீங்க சில வழிகள்


மலச்சிக்கல் நீங்க சில வழிகள்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
    


காலையில் எழுந்ததும் சில பேர் பாத்ரூமை தேடி ஓடுவார்கள், ஆனால் நிறைய பேருக்கு காலையில் எழுந்தவுடன் காபி டீ குடித்து அதன் பிறகு சிலருக்கு பாத்ரூமில் சென்று அமர்ந்து ஒரு சிகரெட்டும் பிடித்த பின்னர்தான் காலைக்கடனே கழிக்க முடியும். ஆனால் பெரும்பாலானோருக்கு காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் மலமே கழிப்பதில்லை அல்லது சரியாக கழிவை வெளியேற்றுவதில்லை. வயிற்றில் ஸ்டாக் வைத்துக் கொண்டே இருப்பார்கள், இதனால் சரியான முறையில் பசி எடுக்காது, ஏதாவது சூடாக காபி, டீ சாப்பிட்டவுடன்  உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும், ஆனால் அலுவலகத்தில் அல்லது வேலையில் இருக்கும்போது கழிவறைக்கு செல்வதற்கு வாய்ப்பிருக்காது, அல்லது போக நேரமிருக்காது. இதனால் மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வை அடக்கி கொண்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்பார்கள். மலச்சிக்கல் இங்கேதான் ஆரம்பிக்கிறது.   

ஆனால் இப்படி மலத்தை அடக்கும்போது நம் உடலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நமது உடலில் சாப்பிடும் உணவின் சத்துக்கள் ஜீரண உறுப்புகளால் அனைத்தும் உறிஞ்சப்பட்டு கடைசியாக பெருங்குடலிற்கு வருகிறது, பெருங்குடலின் வேலை என்னவென்றால் உறிஞ்சப்படாமல் விட்ட சத்துக்கள், தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சுவது தான். மலம் வெளியேறாமல் உள்ளே இருக்க இருக்க பெருங்குடல் நமது மலத்தில் மீதி உள்ள   தண்ணீர் சத்து அனைத்தையும் உறிஞ்சி மலத்தை ஈரப்பதம் இல்லாத தக்கையாக மாற்றுகிறது. இப்போது அடுத்தபடியாக வாய்ப்பு கிடைத்தோ அல்லது வாய்ப்பை உருவாக்கியோ நாம் கழிவறையில் சென்று அமரும்போது மேலே சொன்னபடி உலர்ந்து தக்கையாகி போன மலம் மலக்குடலில் நகராது அல்லது நகரும்போது ஆசனவாயை அறுத்துக் கொண்டு வெளியேறுவது போல வலி ஏற்படும். இப்படிப்பட்ட மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்க என்ன என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று பார்ப்போம்.      

நமக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்பதை எந்தெந்த அறிகுறிகள் மூலம் கண்டறிவது…

1. இரண்டு, மூன்று வாரத்துக்கு மேல் மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும் போது.
2. மலம் கழிக்கும் போது வயிறு வலித்தால்.
3. வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால்.
4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.
5. மலத்துடன் கலந்து ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.
6. உடல் எடை குறையும்போது.
7. காய்ச்சல், தலைவலி மற்றும் வாய்க் கசப்பு இருந்தால்.
8. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டும் மாறிமாறி வந்தால்.
9. செரியாமை, பசிக் குறைவு இருந்தால்.
10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.

மலச்சிக்கலினால் வரும் நோய்கள்:
மலச்சிக்கல் பல சிக்கல் என்பார்கள்...
மூட்டு வலிகள், மூல நோய், ஆசனவாய் வெடிப்பு (Fissure), ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், நீரிழிவு நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத்தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவை உதாரணங்களாகும்…



மலச்சிக்கல் ஏன்?

இன்றைக்குள்ள அவசர வாழ்க்கை முறையும், விஷமாகிப் போன உணவும், நவநாகரிகம் என்ற பெயரில் நாம்  மாலில் சாப்பிடும் உணவுகளும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. சமீபத்தில் குளோபல் மார்க்கெட்டிங் ரிசர்ச் ஏஜென்சி நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் கிட்டதட்ட 30 சதவிகிதம் பேருக்கு நீண்டகால மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவிக்கப்பட்ட, பொரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நார்ச்சத்து மிகுந்த உணவை தவிர்ப்பது, அதிக ப்ராசஸ் செய்யப்பட்ட மைதா போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால், புகை பழக்கம், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, உடல்பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது.

வயது ஏற ஏற, செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது ஆகியவை மலச்சிக்கலுக்கு காரணமாகிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

மலச்சிக்கலுக்கு தீர்வுதான்  என்ன?

நம்முடைய தினசரி உணவில் கண்டிப்பாக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அல்லது Sandwitch Type Fooding முறையை மேற்கொள்வது
அதாவது காலை உணவு 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால் 11மணிக்கு ஒரு வாழைப்பழம் அடுத்தபடியாக 2மணிக்கு மதிய உணவென்றால் மாலை 6மணியளவில் நொறுக்குதீனியாக ஏதாவது பழங்களை எடுத்துக் கொள்வது, அடுத்து 8மணிக்கு இரவு உணவென்றால் 9மணிக்கு ஏதாவது ஒரு பழம் அல்லது வாழைப்பழம் சாப்பிட ஆரம்பித்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாக ஆரம்பிக்கும்..

இதிலும் பிரச்சினை முழுவதுமாக சரியாகவில்லை என்றால் ஒவ்வொரு சாப்பாட்டு வேளைக்கு 5நிமிடம் முன்பாக உலர்ந்த திராட்சை பழங்களை 20-25வரை சாப்பிட்டு வந்தால் மலம் சுகமாக போகும்.

நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் நம்முடைய உணவு என்பது வெறுமனே அரிசி மட்டுமே நிறைந்ததாக இருக்கும், அதிலும் தற்போது கிடைக்கும் முழுவதும் தீட்டப்பட்ட அரிசி வகைகள் வயிற்றை நிரப்பவும், நோயை வரவழைக்க மட்டுமே உபயோகமாகின்றன.

கொஞ்சம் மாற்றி நம்முடைய சிறுதானிய வகைகளில் சமையல் செய்து சாப்பிடலாம், அடப்போங்க சார் சிறுதானியம் என்றாலே வீட்டில் களியும் கூழும்தான் செய்து போடுகிறார்கள் என்பவர்கள் விகடன் பிரசுரத்தில் வெளியான “பசியாற்றும் பாரம்பரியம்” என்ற புத்தகத்தை வாங்கினால், ஒரு மாதத்தில் 90 வேளை சாப்பாடு சாப்பிடுகிறோம் என்றால் 90 வேளையும் விதவிதமான சுவையான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.

இதற்கு மேலும் மலச்சிக்கல் உள்ளவர்கள் சிறிதும் கூச்சப்படாமல் சர்வோதயா சங்கம், காதி கிராமயோக் பவன், இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் இனிமா கேன்-ஐ வாங்கி உபயோகிக்க ஆரம்பியுங்கள்.
எப்போதும் உடலை இயக்கத்துடன் வைத்திருங்கள், சோம்பி கிடப்பவர்களுக்கே பெரும்பாலும் மலச்சிக்கல், மூலநோய் வருகின்றது.

தேவையான அளவுக்குத் தண்ணீர் குடியுங்கள்.
பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.
பசை மட்டுமே காய்ச்சுவதற்கு பொருத்தமான மைதா மாவையும், புரோட்டா போன்ற உணவுகளையும், மேலும் எந்த எந்த உணவுகள் மைதா மாவினால் செய்யப்பட்டிருக்க கூடும் என்று நினைக்கிறீர்களோ அந்த உணவுகளை எப்போதுமே உங்கள் வாழ்க்கையில் சாப்பிடாதீர்கள்…
Appendicitis போன்ற அடிப்படையில் மலச்சிக்கலினால் வரும் நோய்களை எந்த ஒரு ஆபரேசனும் இல்லாமல் வெறும் பேதி மாத்திரைகளால் மட்டுமே கூட சரி செய்ய முடியும்…
இரவு உணவுக்குப் பின் தினமும் திரிபலாசூரணம் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். திரிபலா சூரணம் மலச்சிக்கலுக்கு மட்டும் அல்லாமல் பலவிதங்களில் நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.