Posts

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா? "நீர் சூழ் உலகு" என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் "உப்பு". அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம். வீட்டில் பணப்புழக்கம் அதிகம் இருக்கவும், செல்வ நிலை உயரவும் நம் வீட்டிற்கு மாதா மாதம் வாங்கும் பொருட்களில் "மகாலட்சுமியின்" அம்சமான "கல் உப்பை" முதலில் வாங்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் வீட்டில் எப்போதும் இந்த உப்பு சுத்தமாக தீர்ந்து போகாமல் படி பார்த்து கொள்ள வேண்டும். எல்லா சமயங்களிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் உப்பை தரையில் சிந்தாதவாறு பார்த்து கொள்