பக்கவாதம் பாட்டி வைத்தியம்
பத்தே நாளில் பக்கவாத நோய் குணமாக வேண்டுமா? நரம்புகளைப் பலப்படுத்த வாதநாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதத்தை அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். வாதநோய் தீர வாதநாராயணன் இலையை நல்லெண்ணெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும். தோல் நோய்கள் தீர சொறி சிரங்கு உள்ளவர்கள் இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர நீங்கும். சர்க்கரை நோய்க்கு மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும். உடம்பு வலி போக இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தயிருடன் கலந்து அருந்த குணம் தெரியும். இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.