பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?, பக்கவாதத்தை தடுக்கும், பக்கவாதத்தை தடுக்க
பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி? இரத்த அழுத்தம் அதிகமானால்… இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது இரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். இரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது. மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்பு