மூட்டு வலி குணமாக பிரண்டை உப்பு...
மூட்டு வலி என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது ? மூட்டுவலி வயதாவதாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையினாலும் இன்று பரவலாக வருகிறது. இன்று குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்கு மூட்டுவலி இருக்கிறது. மூட்டுவலிக்கு பலபல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூட்டுவலிக்கான அடிப்படையான முதல் காரணம் இன்று நாம் சாப்பிடும் உணவில் ரசாயனங்கள் மட்டுமே உள்ளது, இன்று பெரும்பாலான மூட்டு வலிகளுக்கு காரணம் இயக்கமின்மையே, கடந்த தலைமுறை நபர்களுக்கு பெரும்பாலும் கை, கால் மூட்டுவலிகளே கிடையாது. ஏனென்றால் பெரும்பாலான வேலைகள் அனைத்தும் உடல் உழைப்பினாலேயே செய்யப்பட்டன, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் வேலை இருந்தது. ஆனால் நாகரிக காலத்தில் நாம் சாப்பிடுவதை தவிர உள்ள அனைத்து வேலைகளையும் மெஷின்களே செய்கின்றன, நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் மெஷின்கள் செய்கின்றன, மெஷின்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன... நாம் மூட்டு வாதத்தினாலும், முடக்கு வாதத்தினாலும் முடங்கி போகிறோம்... உங்களுடைய ஆரோக்கியம் உங்களுக்கு திரும்ப வேண்டுமென்றால் உங்களுடைய சோம்பேறித்தனத்தை விடுத்து நம் உடல் முழுவதற்கும் தினமும் கண்டிப்பாக வேலை கொடு