இதய நோய்க்கு சித்த மருத்துவம்
தாமரைப்பூ, செம்பரத்தைபூ, மருதம்பட்டை... இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்! இதயம் காக்க என்ன செய்யலாம்? இன்று முக்கியமாக எழுந்திருக்கும் கேள்வி. `உலகில் இறப்பவர்கள் இருவரில் ஒருவர், இதய நோயால் இறக்கிறார்‘ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சரியான நேரத்துக்கு உணவு உண்ணாதது, உடற்பயிற்சி இல்லாதது, ஜங்க், ஃபாஸ்ட் என மாறிவரும் உணவுப்பழக்கம், புகை, மதுப்பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுவது இதய நோய். அதோடு, பிறவிக் கோளாறு காரணமாகவும் இதய நோய் ஒருவரை பாதிக்கலாம். நாம் ஒவ்வொருவருமே இதய நோய் விஷயத்தில் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். இன்றைக்கு இதயநோய்க்கான சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் வெகுவாக முன்னேற்றம் பெற்றுவிட்டன. அதே நேரத்தில், இதய நோய்க்கு ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவத்திலும் தீர்வுகள் உள்ளன. அது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்... அதிகப்படியாக இதயம் துடிப்பது, வலியோடு மயக்கம் உண்டாவது, நெஞ்சு படபடப்பு, வலி, இதயம் நின்றுவிடுவது... போன்ற அச்சமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். சிகிச்சை பெற வேண்டும்.