முருங்கைக்கீரை மற்றும் முருங்கை பிசின்
முருங்கைக்கீரை மற்றும் முருங்கை பிசின்
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
இந்த முருங்கைக்கீரையை நீங்கள் வேறு ஒரு முறையிலும் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும். காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.
நூறு
கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில்
இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி
இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம்
சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும். அதற்கு
நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து
அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில்
ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான
உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை,
எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட
காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு
இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய
சூழலை நாம் அனுபவிக்கிறோம்.
ஒரு சில உணவுகளை எடுக்கிற பொழுது நிறைய
தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால் உணவு சரியில்லை என்று அர்த்தம். தோசை
எடுக்கிறோம், தோசையை சாப்பிட்டு முடித்த பிறகு அரைலிட்டர் அல்லது ஒரு
லிட்டர் தண்ணீர் குடித்தால்தான் சமமாகிறது என்றால் அந்த உணவு அவ்வளவு
புளிப்பானது, உடம்பிற்குக் கேடானது என்று அர்த்தம். எந்த ஒரு உணவையும்
சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துதல் கூடாது என்றே சொல்வார்கள், உணவை
சாப்பிடுவதற்கு முன்புதான் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு உணவை சாப்பிடுகிற
பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் அந்த உணவு அந்த உடம்புக்கு சரியல்ல என்று
அர்த்தம். ஆக முருங்கைக்கீரை சூப் சாப்பிட்டுப் பாருங்கள், முருங்கைக்கீரை
சாறு சாப்பிட்டுப் பாருங்கள் அப்பொழுது அந்த தாக உணர்வு இருக்காது.
இப்பொழுது
முருங்கைக்கீரை கஞ்சி, இந்த முருங்கைக்கீரையை கஞ்சி மாவுமாதிரி நாம்
செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். பழைய தமிழ் மரபுகளில் ஒரு
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக செய்த உணவு. எங்கள் கிராமத்தில் பண்ணக்கூடிய
ஒரு சின்ன விசயம் ஆடிக்காற்றில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய முருங்கை
மரங்கள் எல்லாம் உடைந்து கீழே விழுந்துவிடும். அப்படி விழுந்த அந்த
முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய இலையை கடைந்து சாப்பிடுவது, சூப் செய்து
சாப்பிடுவது முடியாத ஒரு காரியமாக மாறிப்போகும்.
அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்வார்கள்
என்றால் இலையை எல்லாம் எடுத்து அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர்
சாறு இருக்கிறது என்றால் அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, அதில்
ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே இருநூறு கிராம் சிறுபருப்பு
சேர்த்து, சிறிது சுக்கு ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்.
காயவைத்தோம் என்றால் அரிசி உணவுப்பொருட்கள் எல்லாமே அந்த சாறை
இழுத்துவிடும். அதனை மறுபடியும் காயவைத்து ஒன்றிரண்டாக பொடித்து
வைத்துக்கொள்ளவேண்டும். குருணை அரிசிமாதிரி பொடித்துவைத்துக்கொண்டு
கஞ்சியாக செய்துகொள்ளலாம். இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும்
சாப்பிடலாம் அல்லது காலையில் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வரலாம். இந்த
மாதிரி கஞ்சி சாப்பிடுவதால் என்ன நன்மை என்று பார்க்கிறபொழுது முதுகெலும்பை
வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த கஞ்சிக்கு உண்டு.
L4,
L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5
தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர
வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4,
L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில்
இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5
என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது
இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான்
என்று சொல்லவேண்டும். முருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48
நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு
சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். என்னுடைய
மருத்துவ அனுபவத்தில் பல்வேறுபட்ட அனுபவங்களை நான் பார்த்திருக்கிறேன்.
அதாவது கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய
பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு
வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுத்து நான்
முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறேன் என்ற ஒரு அற்புதமான அறிய தகவலை நான்
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து
சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால்
மிகவும் அற்புதமாக இருக்கும்.
இதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா
என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு.
இன்றைக்கும் நீங்கள் தேனி, போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தூர் போன்ற
இடங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலேயே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான
வழக்கம், மிக எளிமையான மருந்தும் கூட. ஒரு ஐம்பது கிராம் எள்ளு புண்ணாக்கு,
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஐந்து வெற்றிலை, ஒரே ஒரு துண்டு சாதிக்காய்
இவற்றை ஒன்றிரண்டாக உரலில் போட்டு இடித்து அதை அப்படியே கசாயம் செய்து
அவித்து அதை ஒரு டம்ளர் தினசரி சாப்பிட்டுக்கொண்டே வருவார்கள். யாரென்றால்
ஒரு ஐம்பது அறுபது வயதைக் கடந்த ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டு வருவார்கள்.
அவர்களுடைய ஆண்மை நரம்புகள் தூண்டப்பட்டு ஒரு அபாரமான ஆண்மை சக்தி உண்டாகி
ஒரு நீண்ட நேர போகத்திற்கு உரிய ஒரு அற்புதமான உடல்வாகை தரக்கூடிய இந்த
கூட்டுக்கலவை மருந்துக்கு உண்டு. இதை ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது.
ஆக இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு அற்புதமான பலன்கள் உண்டு.
இன்னும்
சொல்லப்போனால் அந்த முருங்கை மரத்தின் வேருக்கு இன்னும் கூடுதல் பலன்
என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்பூச்சி
என்று நிறைய பூச்சிகளுடன் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த
வயிற்றுப் பூச்சிகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்த முருங்கை
வேருக்கு உண்டு. இந்த முருங்கை வேரை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சீரகம்,
சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டோம்
என்றால், நான் சொன்ன எல்லா பிரச்சனைகளும் சரியாகும். பூச்சி புழுக்கள்
இருந்தாலே ஒரு சிலருக்கு உடல் தேராது, மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன
அழுத்தத்தில் இருப்பார்கள், வீட்டில் உள்ள எல்லோரையும் ஒரு
வழிசெய்துகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் இதனை மனநோய் என்று
நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே
இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும்.
அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன்
கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை
வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக்
கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு அற்புதமான பலனைக் கொடுக்கிறது இந்த
முருங்கை.
ஒரு சிலர் உடல்வாகு மிகவும் ஒல்லியாக
இருப்பார்கள், பற்கள் தெளிவில்லாமல் இரத்தம் வந்துகொண்டே இருக்கும், அதே
போல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும்
என்றால் முருங்கை பூவை தினசரி ஒரு கைப்பிடியளவு எடுத்து பாலில் சேர்த்து
வேகவைத்து அதை வடிகட்டி அதில், இரண்டே இரண்டு இதழ் குங்குமப்பூவை சேர்த்து
தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தீர்கள் என்றால் ஆண்மை சக்தி பெருகும்,
உயிரணுக்கள் அபாரமாக பெருகும். அந்த அளவிற்கு இந்த முருங்கைப்பூவுக்கு
அற்புதமான குணம் உண்டு. முருங்கைப்பூவை துவையல் மாதிரியே வீட்டில்
அரைக்கலாம். எனக்குப்பிடித்த துவையல்களிலேயே முருங்கைப்பூ துவையல் எனக்கு
மிகவும் பிடிக்கும். எங்கெல்லாம் முருங்கைப்பூ கிடைக்கிறதோ அதை எடுத்து
வந்து சாப்பிடக்கூடிய ஒரு இயல்பு உண்டு. சமீபத்தில் எனது வாடிக்கையாளர்
ஒருவர் திருவண்ணாமலையிலிருந்து முருங்கைப்பூவை வேறு ஒருவர் மூலம்
கொடுத்துவிடக்கூடிய அளவிற்கு நான் அதன் மேல் ஒரு காதலோடு இருப்பேன் என்று
சொல்லலாம்.
முருங்கைப்பூ,
வெள்ளரி விதை, பூசணி விதை, காய்ந்த மிளகாய், சிறிது கசகசா இவையனைத்தையும்
சேர்த்து அரைத்து துவையலாக வைத்து சாப்பிடலாம். முருங்கைப்பூ துவையல்,
முருங்கைப்பூ சட்னி இவையனைத்தையும் செய்யலாம். நான் ஏன் இதையெல்லாம்
சொல்கிறேன் என்றால் உடலை மேம்படுத்தக்கூடிய உடலில் இருக்கக்கூடிய
பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய இந்த உணவுகள் மறுபடியும் நமது சமூகத்தில் வளம்
வரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நான் இதை சொல்லுகிறேன். நமது உணவுப்
பழக்கவழக்கங்கள் மாறவேண்டும். ஏனென்றால் ஒரு அறிஞன் சொல்லுகிறான் “ஒரு
இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் வழிவழியாக பயன்படுத்தக்கூடிய உணவை
அழித்தால் போதும்”, உணவு முறையை அழித்தால் போதும் ஏனென்றால்
உணவுமுறைகளிலிருந்துதான் ஒரு மரபு கூறு என்று ஒன்று உற்பத்தியாகிறது. ஆக
நமது உணவில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால் கண்டிப்பாக நிறைய
பிரச்சனைகள் வரும் என்பதை மனதில் கொள்ளுங்கள் எனது அன்பான சிறகு இணையதள
நேயர்களே.
முருங்கையில் எண்ணற்ற பலன்கள் உள்ளது.
என்னால் மணிக்கணக்கில் பேச இயலும், தொடர்ந்து புத்தகமே எழுத முடியும்,
முருங்கைக்கீரைக்கு என்னால் 300 பக்கத்திற்கு ஒரு புத்தகமே எழுத இயலும்
அந்த அளவிற்கு மிக அற்புதமான பலன்களை தனக்குள் கொண்ட அற்புதமான ஒரு
பொக்கிசம் என்றால் அது முருங்கைக்கீரையைத்தான் நாம் சொல்லவேண்டும்.
முருங்கை
பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உடலை
வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள
இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. இந்த முருங்கை பிசின் என்றால் என்ன?
இந்த பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு
நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான
கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து
அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். மனிதனுக்குக்கூட பிசின் வெளிதள்ளும்
உங்களுக்குத் தெரியுமா? எப்படி என்றால், கண்களில் பீழை சாடும். எந்த ஒரு
மனிதனுக்கு கண்களில் பீழை சாடுகிறதோ அவனுக்கு தேவையான அளவு சுண்ணச்சத்து,
இரும்புச்சத்து, நார்ச்சத்து இல்லை என்று அர்த்தம். தூங்கி எழுந்த பொழுது
கண்களில் இறுதிப்பகுதியிலே பீழை சாறும், வெண்மை நிறத்தில் இருக்கும். ஒரு
சிலருக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளை வெள்ளையாக பீழையை
எடுத்துக்கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி இருந்தது என்றால் இந்த மூன்று
சத்துக்களும் மிகக்குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். மிகக்குறைவாக
இருக்கக்கூடிய அந்தப் பிரச்சனையை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்றால்
முருங்கை மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய அந்த பிசினை மருந்தாக மாற்றி
சாப்பிட வேண்டும்.
முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து
நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை
இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து
அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன்
கிடைக்கும். நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய
ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை ஒருமணிநேரம்
நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே
சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு
அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும் என்பதை உங்கள் மனதில்
நிறுத்திக்கொள்ளுங்கள்.
இது
மட்டுமா முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடிய
அற்புதமான விதை. ஆண்களுக்கான உயிரணுக்களை அதிகப்படுத்தக்கூடிய விதை.
முருங்கை விதையை பொடிசெய்து வைத்துக்கொண்டு காலை இரவு என்று சாப்பிடலாம்.
அல்லது நெருஞ்சி முள், கோரைக்கிழங்கு, முருங்கை விதை, நீர் முள்ளி விதை
இந்த நான்கையும் சமஅளவு எடுத்து பொடிசெய்து கொண்டு இதை காலை இரவு என்று
இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வரும் பொழுது ஒரு இனிமையான
தாம்பத்தியத்தோடு மனைவி மெச்சிய மணாளனாக வாழக்கூடிய ஒரு சூழலுடன் ஆயுள்
முழுக்க வாழ இயலும். ஆகவே கீரைகளின் ராணியாம் முருங்கையைத் தொடர்ந்து
நாடுங்கள், உங்களுக்கு தலை முதல் பாதம் வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும்
சரிசெய்யக்கூடிய ஒரே ஒரு மூலிகை முருங்கை. அந்த முருங்கையை இருகை தூக்கி
வழிபடுங்கள், அதை உணவாக பாவியுங்கள், தொடர்ந்து நூறாண்டு வாழுங்கள். வாழ்க
நலமுடன் வளமுடன்.