Posts

Showing posts with the label மூலம்

பவுத்திரம் அறிகுறிகள், பவுத்திரம் மூலம், பவுத்திரம் அறுவை சிகிச்சை, பவுத்திரம் கட்டி, பௌத்திரம் அறிகுறிகள், பௌத்திரம் என்றால் என்ன

Image
  பவுத்திர மூலம் என்றால் என்ன?   பவுத்திர மூலம் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோலின் இடையே உருவாகும் ஒரு அசாதாரண சிறிய பாதை ஆகும். குடல் சுரப்பியில் உள்ள சீழ் பவுத்திரத்திற்கு வழிவகுக்கிறது. குடல் கால்வாய் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் இடையில் உள்ள குழாய் ஆகும், இந்த குழாய் உள்ள பகுதியில் எண்ணிலடங்கா சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் ஏற்படும் தொற்று, சீழ் ஏற்படுத்தும், இது கால்வாய் வழியாக, ஆசன வாய் நோக்கி செல்லும்போது, அசாதாரண பாதையை திறந்தபடியே விட்டு செல்கிறது.   நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை? ஆசனவாய் திறப்பை சுற்றிலும் வலி மற்றும் எரிச்சல் இருப்பது இதன் பிரதான அறிகுறிகளாகும். ஓரிடத்தில் அமரும்போது அல்லது நகரும்போது அல்லது குடல் இயக்கத்தின்போது, இடையறாது வலியில் துடிப்பது; சீழ் வெளியேற்றம் அல்லது ஆசன வாய் அருகில் துர்நாற்றம், மலத்தில் இரத்தம் அல்லது சீழ் வருதல்; ஆசனவாய் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது சிவந்து காணப்படுதல்; காய்ச்சல் , உடல் சோர்வு , குளிர் மற்றும் உடல் நலமில்லாமல் இருப்பது போன்ற ஒரு பொதுவான உணர்வு, ஆகியவை கூடுதல் அறிகுறிகள

சீழ் மூலம், சீழ் மூலம் குணமாக

Image
  மூல நோயை விரட்ட   ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளிவருவதைத்தான் மூலநோய் என்கிறார்கள். மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன. சீழ் மூலம் தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் இரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள். இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன. ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள். அவை: நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், இரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூ