Posts

Showing posts with the label கருத்தரித்தல்

கருத்தரித்தல் பரிசோதனை

Image
  கர்ப்பிணிக்கு என்ன என்ன பரிசோதனைகள்?   தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல். நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது. இக்காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் என்ன?   1. சிறுநீரில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Pregnodex test): வழக்கமாக வரும் நாளிலிருந்து ஒரு வாரம்வரை மாதவிலக்கு தள்ளிப் போனாலோ, அந்த காலத்தில் லேசாக தலைச்சுற்றல் இருப்பது போல் உணர்ந்தாலோ, கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிகாலைச் சிறுநீரைப் பரிசோதிப்பது நல்லது. ஆனால், கட்டாயமில்லை. சிறுநீரில் ‘ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன்’ (Human Chorionic Gonadotropic Hormone-hCG) இருக்கிறத

கருத்தரித்தல் அறிகுறிகள்

Image
  கர்ப்பமாக இருப்பதற்கான 17 வகையான ஆரம்ப அறிகுறிகள்!   பெண்ணுக்கும் கர்ப்ப அனுபவங்களானது வேறுபட்டவைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது அறிகுறிகளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்ப்பத்திற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறிகுறிகள் காணப்படலாம். மேலும், கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீகாரம் அளிப்பதாக இல்லை. மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் கர்ப்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப்ப அறிகுறிகள் கூட கண்டறியலாம். அதிலும் உறவு கொண்டு ஒரு ஜோடி வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் மாதவிடாய் சுழற்சி நடைபெறவில்லை. ஆகவே இப்போது கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள அவலாக இருப்போம். ஆனால் மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனால் மட்டும் கர்ப்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்துவிட முடியாது. இருப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டால்,