சிறியாநங்கை
சிறியாநங்கை
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
1. தாவரப்பெயர் – ANDROGRAPHIS PANICULATA.
2. தாவரக்குடும்பம் -ACANTHACEAE.
3. வகை -பெரியா நங்கை என்றும் உள்ளது.
4. வளரும் தன்மை – செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு
குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக்
கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு
மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி
செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ
போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 – 2 செ.மீ. நீள காய்கள் விடும்.
பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று
தின்றால் கசப்பாக இருக்கும்.
5. முக்கிய வேதியப் பொருட்கள் – ஆன்டி ரோகிராப்பின் மற்றும்
பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், ‘கால்மேகின்’
என்ற கசப்புப் பொருளும் உண்டு.
6. பயன் தரும்பாகங்கள் – இலை மற்றும் வேர்ப் பகுதிகள்.
7. பயன்கள் – இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து
தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு,
வயிற்றுப் போக்கு போன்றவற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோய்க்கும் நல்ல
மருந்து. நீரிழிவு நோய்க்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்துகிறார்கள். நஞ்சுக்
கடிக்கும் இதைப் பயன்படுத்துவார்கள். சிறியாநங்கை என்ற மூலிகை
பெண்வசியத்தைச் செய்யும். வெங்காரத்தைப் பஸ்பமாக்கும். தேகத்தில் வனப்பை
உண்டாக்கும். விஷமுறிக்கும் மருந்தில் கூட்டு கூட்டு மருந்தாக செயல்படுகிறது. பெரியா நங்கை என்ற ஒரு வகையும் உண்டு.