ரோஸ்மேரி
ரோஸ்மேரி
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
1) மூலிகையின் பெயர் – ரோஸ்மேரி.
2) தாவரப்பெயர் – ROSEMARINUS OFFICINALIS.
3) தாவரக்குடும்பம் – LABIATAE.
4) தாவர அமைப்பு – இது ஒரு குறுஞ்செடி. இது ஸ்பெயின்
போர்சுக்கலிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. நீள் பாத்தி அமைத்து
இரண்டடிக்கு இரண்டடி இடைவெளி விட்டு நாற்றுக்களை நடுவார்கள். ஐந்து
நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். இதன் இலைகள் எதிர் அடுக்கில்
வேப்பிலை போன்று கூர்மையாக ஊசிபோன்றும் இருக்கும். நட்ட எட்டாவது மாதம்
முதல் இலை தண்டு அறுவடை செய்யலாம். இலையை ஐந்து நாட்கள் நிழலில் உலர வைத்து
பின் எண்ணெய் எடுப்பார்கள், இலை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அறுவடை
செய்வார்கள். அப்போது 30 -50 செ.மீ.நீளமுள்ள குச்சியுடன் பூவையும் சேர்த்து
அறுவடைசெய்யவேண்டும். வெட்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். 8
– 10 செ.மீ நீளமுள்ள குச்சிகள் இதற்கு ஏற்றவை. வெட்டுக் குச்சிகள் 40
நாட்களில் வேர் பிடிக்கும்.இதன் இலைகள் வாசனையாக இருக்கும். ரோஸ்மேரி
மலைப்பகுதிகளில் நன்றாக வளரும். சமவெளியில் வளர்வது எண்ணெய் எடுக்கும்
சதவிகிதம் மிகக்குறைவாகஇருக்கும்.
5) பயன் தரும் பாகங்கள் – இலை, தண்டு, பூ ஆகியவை.
6) மருத்துவப்பயன்கள் – ரோஸ்மேரி இலை தண்டு, பூ, இவைகளில் இருந்து
எடுக்கப் படும் வாசனை எண்ணெய் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இலைகளில்
உள்ள வாசனைப் பொருள் அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன் படுகிறது. மேலும்
உணவு, உணவுப் பொருள்களைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது. இது சிறுநீர்
சம்பந்தமான கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். கண்களுக்கு குளிர்ச்சியூட்ட,
சுத்தப்படுத்திய நீருடன் கலந்தும் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் இலைகளை
பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து
பருகினால் சுவையாகவும், உடலுக்குப் புத்துணச்சியையும் ஊட்டுகின்றது. இது
இரத்த ஓட்டப் பாதைகளை சீராக வைக்கக் பயன்படுகிறது. உடலின் மேல் பாகத்தில்
தேனீக்கள் கொட்டியதைக் குணப்படுத்துகிறது. வாய் நாற்றத்தையும் போக்கும்,
பாலுண்ர்வைத் தூண்டுகின்றது. நரம்பு சம்பந்தமான நோய்களைக்
குணப்படுத்துகின்றது. வயிற்று வலி, தலை வலிகளைக் குணப்படுத்துகின்றது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது. ரோஸ்மேரி
இலையின் பொடியை மாமிசம், மீன் போன்ற உணவுப் பொருளோடு சேர்க்கும் போது
விஷத்தன்மையைப் போக்குகின்றது. தொண்டைப் புண், பல் ஈறு வலி, நாட்பட்ட
ஆறாதபுண் இவைகளைக் குணப்படுத்துகின்றது. இதன் எண்ணெய் ஞாபக சத்தியை
அதிகரிக்கின்றது. உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலிகளைக்
குணப்படுத்துகின்றது.
(ROSEMARY (Rosmarinus officinalis) is a stimulant of the
circulatory system. It is used to treat bites and stings externally.
Internally, it is used to treat migraines, bad breath, and to stimulate
the sexual organs. It is also used to treat nervous disorders, upset
stomachs, and is used to regulate the menstrual cycle and ease cramps.
Mixing the crushed leaves generously into meats, fish and potato salads
prevents food poisoning while using itin antiseptic gargles relieves
sore throat, gum problems and canker sores.The essential oil is used in
aromatherapy as an inhalant and decongestant, and to enhance memory.
Rosemary is also used in lotions to ease arthritisand muscle pain. )