பெண்கள் இயற்கையாக முறையில் கர்ப்பம் தரிக்க...

இயற்கையாக முறையில் கர்ப்பம் தரிக்க...

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கிறது.

கருப்பையில் புழுக்கள் இருந்தால்

மிளகு, வெள்ளைப்பூண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 60கிராம் எடை எடுத்து துளசிச்சாறு விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.
புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.
விழுதி வேர் 70கிராம் கொண்டு வந்து இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்பூச்சிகள் சாகும்.

உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் சதை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகு எண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.

உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் 
கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.

உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து தண்டில் புசி புணரவும்.

வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.

கல்யாண முருங்கைப் பூவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.

அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர பெண்மலடு தீரும்.

இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து மாதவிலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.

மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சூரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

சிற்றாமணக்கு எண்ணையில் மஞ்சனெத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.