வெயில் மற்றும் நம் தீய பழக்க வழக்கங்களினால் வரும் உடல் சூட்டை குறைக்க...

வெயில் மற்றும் நம் தீய பழக்க வழக்கங்களினால் வரும் உடல் சூட்டை குறைக்க...

முக்கியமாக அதிக நேரம் வெயிலில், வெளியில் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது,

இதனால் நம்  முடி முதல் அடி வரை உள்ள அனைத்து உற்ப்புகளும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே சொல்லி வைத்து சென்ற ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள்
1.நல்லெண்ணெய் 
2.பூண்டு 
3.மிளகு

செய்முறை
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்கள். ஏனெனில், இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்றே மாதங்களில் குழந்தை உருவாகும்.