இதய அடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்க உதவும் அன்றாடம் உபயோகப்படுத்த 5 பொருட்கள்

இதய அடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்க உதவும் 

அன்றாடம் உபயோகப்படுத்த 5 பொருட்கள் 


உடலில் இரத்த ஓட்டம் என்பது சீராக இருந்தாலே உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக மூளைக்கும் இதயத்துக்கும் சீரான இரத்த ஓட்டம் இருந்தாலே எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இரத்த ஓட்டம் குறையும் போது இரத்த குழாய்களில் அடைப்புகளை உண்டு செய்து அந்த உறுப்பின் பணியையும் பாதிக்க செய்து விடும். இந்த இரத்த ஓட்டத்தைச் சீராக்க மூலிகைகள் உண்டு அது என்னென்ன எப்படி பயன்படுத்துவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மூளையிலும் இதயத்திலும் இரத்த அடைப்பு ஏற்படாமல் இருக்க நோய்களுக்கான மருந்துகளுடன் இரத்தமெலிதல் மருந்துகளும் அளிக்கப்படும். இரத்த அடர்த்தியைக் குறைக்கும் இந்த மருந்துகள் போன்றே இயற்கையாகவே இரத்த அடர்த்தியைக் குறைத்து அடைப்பை தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் மூலிகைகள் நம் வீட்டு சமையலறையில் உண்டு . எந்தெந்த மூலிகைகள் இரத்த அடர்த்தியைக் குறைக்கின்றன. அதை எப்படி எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

இரத்த அடைப்பை தடுக்கும் பூண்டு

பூண்டு antithrombotic property என்று சொல்லப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இரத்த அடைப்பை தடுக்கிறது. அதனால் தான் பூண்டு இயற்கை ஆஸ்ப்ரின் என்றும் அழைக்கப்படுகிறது.

எப்படி எடுப்பது?

தினசரி பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வர வேண்டும். பூண்டு பால், உணவில் பூண்டு, பூண்டு சுட்டு சாப்பிடுவது என்று எடுத்து வருவதன் மூலம் இயற்கையாகவே இரத்த அடர்த்தியை தவிர்க்கலாம். இரத்த குழாய்களிலும், இதயத்திலும் அடைப்பு வராமல் தடுக்க முடியும்.

இரத்த அடைப்பை தடுக்கும் இஞ்சி :

ஆஸ்ப்ரின் என்னும் மருந்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்தக் கூடியது. அதில் இருக்கும் வேதியியல் பொருள் சாலிசிலிக் ஆசிட். அந்த வகையில் இஞ்சியில் இயற்கையாகவே சாலிசிலிக் ஆசிட் உள்ளது.


தினசரி உணவில் இஞ்சி சேர்த்து வருவதன் மூலம் அல்லது சித்த மருத்துவ முறைப்படி இஞ்சியை தேனில் ஊறவைத்து எடுத்து வருவது பலனளிக்கும். இதை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சாலிசிலிக் ஆசிட் இருக்கும். இதனால் இரத்தகுழாய்களில் அடைப்பு வராது. இரத்த ஓட்டம் சீராகும். இதனால் பக்கவாதம், இதய அடைப்பு வராமல் தடுக்க முடியும்.

இரத்த அடைப்பை தடுக்கும் மஞ்சள் :

மஞ்சள் என்பது கிருமி நாசினி இதில் உள்ள குர்குமின் என்னும் ஆல்கலாய்டு இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது. இது இரத்தம் உறைதலையும் தடுக்கும். இரத்தக் குழாய்களில் சேரும் ப்ளேக் என்னும் கிருமி அடைப்பை நீக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் இரத்த உறைதலை தடுக்கும் பண்புகளையும் கொண்டது.

எப்படி எடுப்பது?

மஞ்சள் உணவில் சேர்த்து வருகிறோம். பாலில் சிட்டிகை மஞ்சள் சேர்த்து வரலாம். மஞ்சள் அனைத்து உணவிலும் சேர்க்கலாம்.

இரத்த அடைப்பை தடுக்கும் கொள்ளு :

கொள்ளு குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இது அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. இது ஃப்ரீபயாட்டிக் என்று அழைக்கப்படுகிறது. இது கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தகூடியது. அதே போன்று தைரோசின் என்னும் அமினோ ஆசிட் அதிகப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. தைராய்டு நோய் இருப்பவர்களுக்கு டி4 என்னும் ஹார்மோன் இந்த தைரோசின் என்னும் அமினோ ஆசிட்லிருந்து தான் உற்பத்தி ஆகிறது. அதனால் தைராய்டு நோயாளிகள் உணவில் அதிகமாக கொள்ளு சேர்த்து வரலாம்.

இது ஹார்மோன் சமநிலைப்படுத்துகிறது. கொள்ளில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பை குறைத்து ஹார்மோன் சமநிலை செய்து இரத்தகுழாய்களில் அடைப்பை தடுக்கிறது.

எப்படி எடுப்பது?

கொள்ளு ஊறவைத்து நீராக்கி எடுக்கலாம். கொள்ளு ரசம், கொள்ளு சூப் வைத்து குடிக்கலாம். கொள்ளு சுண்டல், கொள்ளு முளைகட்டிய குழம்பு என்றும் செய்து சாப்பிடலாம்.

இரத்த அடைப்பை தடுக்கும் ஆவாரை :

ஆவாரை. ஆவாரையின் இலை, பூ, என்று எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். ஆவாரை இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை கரைக்க கூடியது. இரத்தகுழாய்கள் வீக்கத்தை தடிமனை தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது.

ஆவாரையில் உள்ள புரோஆந்தோசயனிடின் proanthocyanidin என்னும் பண்பும்,lycopene என்னும் நிறமியும் இணைந்து இந்த நன்மைகளை அளிக்கிறது.

எப்படி எடுப்பது?

ஆவாரையை டீயாக தயாரித்து குடித்து வரலாம். அல்லது பொடி கடைகளில் கிடைக்கும் அதையும் எடுத்துவரலாம்.

மேற்கண்ட இந்த 5 மூலிகைகளும் தினசரி எடுத்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் அடைப்பு சேராது. மாரடைப்பு இதயநோய் தடுக்கப்படும்.
இப்படி ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட இந்த ஐந்து மூலிகைகளும் சரியான முறையில் எடுத்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு. இது ஆயுள் முழுமைக்கும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதன் மூலம் பல நோய்களிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.