நகச்சொத்தையை தடுக்கும் மருதோன்றி இலை...
நகச்சொத்தையை தடுக்கும் மருதோன்றி இலை...
மருதாணியை
கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே
நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து
விடுகிறது.
தேமல் வராமல் தடுக்கும் :
ஒரு
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி
இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு
விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.
தோல் வியாதிகள் வராமல் தடுக்கும் :
அரிப்பு,
படை போன்ற சரும பிரச்சினை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு
ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு
வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.
வெள்ளைபடுதல் குணமாகும் :
பெண்களுக்கு
வெள்ளைபடுதல் பிரச்சனை பெரும் சங்கடத்தை கொடுக்கும். வெள்ளைபடுதல்
பிரச்சினை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைத்து 6 தேக்கரண்டி அளவு வெறும்
வயிற்றில் காலை வேளைகளில் குடித்து வர வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு
செய்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.
வாய் புண்களை குணமாக்கும் :
நீண்ட
நாட்களாக இருந்து வரும் ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு
இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து பின் வாய் கொப்பளிக்கலாம். இப்படி
செய்வதால் வாயில் உள்ள கிருமிகள் அழியும், புண்களும் ஆறும்.
அம்மை தழும்புகளை குணமாக்கும் :
அம்மை
நோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் குணமானாலும் அம்மை தழும்புகள் உடனே
குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல்
பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில்
குணமாகும். வெயில் கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று போடலாம், விரைவில்
குணமாகும்.
தலைமுடி பிரச்சினைகளை தீர்க்கும் :
அனைத்து
வகையான தலைமுடி பிரச்சினைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து
பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு
பிரச்சினை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள்
அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.
நல்ல தூக்கம் வரும் :
மருதாணி
செடியின் வேர், நோயை நீக்கி உடலைத் தேற்றும், மருதாணி பூக்களைச் உலர்த்தி
தலையணை போல் செய்து அதில் படுத்து வந்தால் நல்ல தூக்கம் உண்டாவதுடன், பேன்
பிரச்சினையும் குறையும்.
நகங்களை பாதுகாக்கும் :
மருதாணி
இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும்
கால் நகங்களின் மீது வைத்து விடவேண்டும். பின்னர் காலையில் எழுந்து கழுவி
விடவேண்டும். இவ்வாறு 15 நாளுக்கு ஒரு முறை செய்து வந்தால் நகம்
சொத்தையாவது தடுக்கப்படும்.