பெண்களுக்கு 30-களிலேயே மூட்டுவலி...

பெண்களுக்கு 30-களிலேயே மூட்டுவலி... 

 

காரணம் தவிர்க்கப்படும் அந்தப் பழக்கம்..

சமையல், பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவது, வேலைக்குக் கிளம்பும் கணவருக்குத் தேவையானது எனப் பம்பரமாகச் சுழலும் பெண்கள் காலைக்கடனைத் தள்ளிப் போடுகிறார்கள்

 

அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை

டியர் பெண்களே... 

முப்பதுகளிலேயே உங்களுடைய கால் மூட்டுகளில் `கடக்_முடக்' என்று சத்தம் வருகிறதா, தாங்கமுடியாத அளவுக்கு வலியும் வந்து வந்து செல்கிறதா. இதற்கு, அப்புறம் பார்த்துக்கலாம் எனக் கண்டுகொள்ளாமல் விடுவதோ, வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுவதோ தவறான விஷயம்தான். இதனால், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறியாமல் தள்ளியும் போடுகிறீர்கள் என்பதே உண்மை. கால் மூட்டுகளில் `கடக்முடக்' சத்தமும் வலியும் ஏன் வருகிறது; வராமல் தடுக்க என்ன வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்பதை பார்ப்போம்

 

மூட்டு கடக் முடக் சத்தம் என்ன காரணம்

மலச்சிக்கல் தான்………

பல பிரச்னைகளுக்குக் காரணம்' என்பது மருத்துவப் பொன்மொழி. நம்முடைய உடம்பானது, சாப்பிட்ட உணவுகளிலிருந்து சத்துகளைப் பிரித்துக்கொண்டு, கழிவை அனுப்புகிறது. ஒரு நாளைக்கு இரு வேளை கழிவுகளை கட்டாயம் வெளியேற்ற வேண்டும். `ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மலம் கழிப்பேன்' என்பதும், `காபி அல்லது டீ குடித்தால்தான் மலம் வருகிறது' என்பதும், வரும், ஆனால் எப்போது வரும் என்பது தெரியாது' என்பதும் மலச்சிக்கல்தான்

 

காலைக் கடன் கழிப்பதில் பெண்களிடம் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. காலையில் எழுந்ததுமே சமையல், பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவது, வேலைக்குக் கிளம்பும் கணவருக்குத் தேவையானது எனப் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருக்கிறார்கள். இதனால், எல்லா வேலைகளையும் முடித்த பிறகு போகலாம் என அடக்கிக்கொள்வார்கள். இங்குதான் பெண்களைப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. கழிவுகள் சரியாக வெளியேறாத உடம்பின் குடல் பாகத்தில், வெப்பமும் வாயுவும் அதிகமாக உருவாக ஆரம்பிக்கும். இந்த வெப்பமும் வாயுவும் குடலிலிருந்து மெள்ள மெள்ள உடலின் மற்றப் பகுதிகளுக்குப் பயணமாகி, எங்கெல்லாம் எலும்புகள் இணைக்கும் மூட்டுகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தேங்க ஆரம்பிக்கும்

 

  எலும்புகள் இணைக்கும் மூட்டுகளில் சைனோவியல் மெம்பரேன்' எனப்படும் ஜவ்வும், 'சைனோவியல் ஃபிலூய்டு' எனப்படும் திரவமும் இருக்கும். இந்த இரண்டும்தான் எலும்பு மூட்டுகள் வலியில்லாமல் சுழல, வேலை பார்க்க உதவுபவை. மலச்சிக்கலால் அதிகமாக உருவான வெப்பம், இந்த எலும்பு மூட்டுகளில் இருக்கும் ஜவ்வின் ஈரப்பதத்தை மெள்ள மெள்ள குறைத்து, ஜவ்வைத் தேய்மானம் அடையச் செய்யும். உடம்பில் அதிகமாக உற்பத்தியான வாயுவும், இந்த மூட்டுகளில்தான் தேங்க ஆரம்பிக்கும். விளைவு, மூட்டுப் பகுதிகளை நீங்கள் அசைக்கும்போதெல்லாம் தேய ஆரம்பித்த ஜவ்வை, இரண்டு பக்கமும் எலும்புகள் உரச ஆரம்பிக்கும்; அதனால், `கடக்  முடக்' எனச் சத்தம் வர ஆரம்பிக்கும். தவிர, மூட்டுகளில் வாயுவும் தேங்கி நிற்பதால், வலியும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.

 

மேலே சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஒரு வாரத்தில் நிகழ்கிற விஷயம் கிடையாது. ஆறு மாதத்தில் ஆரம்பித்து, ஒரு வருடம்கூட எடுத்துக்கொண்டு மெள்ள மெள்ள பெண்களைத் தாக்கும். இதனுடன் பெண்களுக்கே உரிய சரிவிகித உணவில்லாமை, கால்சியம் குறைபாடுகளும் சேரும்போது, அது உங்களை மெள்ள மெள்ள `ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்' பிரச்னைக்குள் தள்ளிவிடும். இத்தனை பிரச்சினைகளின் ஆரம்பம், நாளொன்றுக்கு இரு வேளையும் கழிவுகளை வெளியேற்றாததுதான்.

 

வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

   இரவுகளில் இரண்டு இட்லி அல்லது, இரண்டு சப்பாத்தி, அதனுடன் ஒரு வாழைப்பழம் அல்லது, ஒரு கொய்யா அல்லது, ஒரு பெரிய துண்டு பப்பாளி என அளவாகச் சாப்பிடுங்கள். காலையில் எழுந்ததும் பல் தேய்த்து, ஒரு சொம்புத் தண்ணீர் குடித்தவுடன் கழிவுகள் வெளியேறுகிறபடி உடம்பைப் பழக்குங்கள். கழிவுகள் வெளியேறாத நாளில் ஒரு வேளை உணவைச் சாப்பிடாதீர்கள். உங்கள் உடலின் வெளிப்பகுதியைப் போலவே குடல் பகுதிகளையும் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டால், மூட்டுகளில் சத்தம் வராது, வலியும் வராது.

 

பூண்டு

  மலச்சிக்கல் வராமல் தடுக்க, வாரம் இரண்டு முறை 10 பூண்டு பற்களை எண்ணெய்யில் வதக்கி, நன்கு மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடியுங்கள். பெருங்காயம் சேர்த்து சமைக்கவேண்டிய உணவுகளில், மறக்காமல் கட்டிப் பெருங்காயம் சேருங்கள்.

 

  கால்சியம் குறைபாடும் இந்தப் பிரச்சினையை அதிகப்படுத்தும். பிரண்டைத் துவையல், கேழ்வரகு அடை, முருங்கைக்கீரை - பூண்டு பற்கள் சேர்த்த சூப் ஆகியவற்றைச் சாப்பிட்டு, எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ளுங்கள்.

 

வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

மூட்டுகளில் `கடக்  முடக்' சத்தம் வந்துவிட்டாலே, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் எனப் பயந்துவிடாமல், கால்சியம் மற்றும் ஆர்த்ரைட்டீஸ்க்கான இரத்தப் பரிசோதனைகளைச் செய்து, உங்கள் பிரச்சினை எந்த ஸ்டேஜில் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளுங்கள். மூட்டு வலி பிரச்னையில், ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை, அறிகுறிக்குத்தான் தீர்வு இருக்கிறதே தவிர, பிரச்சினைக்கான காரணத்துக்குத் தீர்வு இல்லை. அதனால், வெப்பத்தைத் தணித்து, வாயுவை அகற்றி, சைனோவியல் ஜவ்வின் தேய்மானத்தையும் சரிசெய்யும் மாற்று மருத்துவங்களை நாடிச் செல்லுங்கள்

 

பிரச்சினையின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள் என்றால், பசலைக்கீரை மசியலைத் தினமும் ஒரு கப் சாப்பிடுங்கள். பிரண்டைத் துவையல் வாரம் இருமுறை சாப்பிடுங்கள். இரண்டுமே மூட்டுகளுக்கு இடையே இருக்கும் ஜவ்வுகளில் சைனோவியல் திரவத்தின் உற்பத்தியைத் தூண்டிவிடும். தவிர, உடல் வெப்பத்தைத் தணிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வயிற்றில் சேர்ந்திருக்கும் வாயுவை அகற்ற, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் வாத நாராயண சூரணத்தை ஒரு டீஸ்பூன் எடுத்து, தண்ணீரில் கலந்து குடிக்கலாம்

 

வாரம் இரண்டு முறை இதைச் செய்தாலே, உடம்பில் இருக்கும் கழிவுகளும், கெட்ட வாயுவும் வெளியேறிவிடும்.

 

நாள்பட்ட மூட்டு வலிகள், Rheumatoid arthritis, Arthritis, Osteoarthritis, Gout. Psoriatic arthritis முதலிய நோய்களை முழுமையாக குணப்படுத்தும் பிரண்டை உப்பு, கட்டுக்கொடி, பஞ்சகவ்யா மற்றும் சித்த ஆயுர்வேத மருந்துகளும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்..

தொடர்புக்கு: 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147