தீராத மூக்கடைப்பு, சளி, அலர்ஜி தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?

தீராத மூக்கடைப்பு, சளி, அலர்ஜி தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? 

நொடியில் சுவாச பிரச்சினை தீர்ந்து சீராக மூச்சு விட வீட்டிலேயே என்ன செய்யணும்? 

நம்மை சுற்றியுள்ள காற்றில் இருக்கக்கூடிய நுண்ணிய பொருட்கள் சுவாசிக்கும் பொழுது சுவாச பாதையில் சென்று நீர் குமிழ்களை ஏற்படுத்துகிறது இதனால் மூக்கடைப்பு உண்டாகிறது. அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுவது உண்டு.

 தீராத மூக்கடைப்பால் அவதிப்படுபவர்களுக்கு நொடியில் சுவாச பாதை திறந்து சீராக மூச்சு விட வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய விஷயங்கள் என்னென்ன? என்கிற ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சுவாச பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்வதற்கு எளிய யோகா போன்றவற்றை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளும் தீர்வதற்கு ஒரே வழி இதுதான் என்று கூற முடியும். தொடர்ந்து கபாலபாதி என்னும் பிராணயாமத்தை மேற்கொண்டு வந்தால் சுவாச பிரச்சனைகள், மூக்கடைப்பு, அலர்ஜி போன்றவற்றிற்கு நிரந்தரமாக தீர்வு காணலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த பயிற்சியை ஒரு பத்து நிமிடம் மேற்கொண்டால் போதுமானது.கால்களை கிராஸாக பத்மாசனம் செய்வது போல மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகு தண்டுவடம் வளையாமல் நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி, தோள்களை லேசாக விட்டு, இரண்டு கைகளையும் கால் மூட்டின் மீது வைத்து தியானம் செய்வது போல அமர்ந்து கொள்ள வேண்டும். பின் மூச்சை இழுக்கும் பொழுது மிக மிக மெதுவாகவும், மூச்சை விடும் பொழுது சற்று வேகமாகவும், சீராகவும் விட வேண்டும். இதுபோல தினமும் பத்து நிமிடம் செய்த பிறகு நீங்கள் அன்றாட வேலைகளை செய்யலாம். உங்களுடைய உடலில், வாழ்க்கை முறையில் நீங்கள் பல பெரிய மாற்றங்களை சந்திக்கலாம்.

அடிக்கடி மூக்கு துவாரங்கள் அடைத்துக் கொண்டு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படுகிறதா? சளி தேக்கம் இருக்கிறதா? 

சட்டுனு ஒரு சின்ன வெங்காயத்தை கையில் எடுங்கள். தோல் உரித்து அதனுடன் ஒரு இரண்டு மிளகை வைத்து கடித்து மென்று சாப்பிடுங்கள். இரண்டு பக்கமும் வைத்து சுவைக்க வேண்டும். இதனால் அதனுடைய சாறு மற்றும் நெடியானது மூக்கு துவாரங்களுக்குள் செல்லும். மூக்கை லேசாக மூடி கொள்ளுங்கள். காற்று வெளியில் போகக்கூடாது. சாப்பிட்டு முடித்ததும் திறந்து விடலாம். இதனால் மூக்கடைப்பு ஒரே நொடியில் நிவாரணம் காணும்.மூக்கடைப்பிற்கு மற்றொரு மருத்துவமும் உண்டு. மூன்று டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை தாளிப்பு கரண்டியில் ஊற்றி லேசாக காய விடுங்கள். ஒரு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக கத்தரிக்கோலால் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டைப்பாக்கு அளவிற்கு பச்சை கற்பூரத்தை சேர்த்து காய விடுங்கள். கற்பூரம் கரைந்து, வெற்றிலையின் சாறு தேங்காய் எண்ணெயில் இறங்கியதும் ஆறவிட்டு விடுங்கள். ஆறியதும் ஒவ்வொரு துவாரத்திலும் ஒவ்வொரு சொட்டுக்கள் விட்டால் இரண்டு நிமிடத்தில் மூக்கடைப்பு சரியாகிவிடும்.மேலும் மூக்கடைப்பிற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை சிறு கோலிகுண்டு அளவிற்கு அரைத்து உருண்டையாக்கிக் கொள்ளுங்கள். இந்த உருண்டையை தேனில் குழைத்து அப்படியே விழுங்கி விடுங்கள். இதனால் சுவாச பாதைகள் அனைத்தும் பல்வேறு தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். வேப்பிலையில் இருக்கும் கசப்பு உடலுக்கு அவ்வளவு நன்மை செய்யும்.சளி, கபம், மூக்கடைப்பு அனைத்தும் தீர பத்து மிளகுகளை தினமும் இரவு தூங்கும் பொழுது இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். தேனுடன் ரெண்டு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்க்கலாம். பிறகு காலையில் எழுந்ததும் அதனை மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்தாலும் சுவாச பாதையில் இருக்கும் அடைப்புகள் நீங்கும். மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் குறையும். இது எல்லாம் தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாகாது. நிரந்தர தீர்வாக இருப்பது சுவாச பயிற்சி மட்டுமே எனவே தவறாமல் அதனை கடைப்பிடியுங்கள்.