உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மஞ்சள் கலந்த பால்...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மஞ்சள் கலந்த பால்...

பொதுவாக மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதனால் தான் சகல உணவுகளிலும் இதனை சேர்க்கின்றனர். 

இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

அதனால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ள பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இன்னும் நன்மைகளை பெறவேண்டுமாயின் சில நட்ஸ்களை மஞ்சள் கலந்த பாலுடன் கலப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

 தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

ஜலதோஷம் மற்றும் காய்ச்சலைத் தடுக்க ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ள பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உறங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். 

அரைத்த பாதாம் அல்லது அவற்றின் பேஸ்ட்டை மஞ்சள் பாலில் சேர்க்கும்போது,​​ பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால் அது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

மஞ்சள் கலந்த பாலுடன் அத்திப்பழத்தை சேருங்கள். இந்த சூடான பானத்தில் டிரிப்டோபன் மற்றும் மெலடோனின் எனப்படும் கலவைகள் இருப்பதால் உங்கள் தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது.

பேரீச்சம்பழம் மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் போது, இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்களில் நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவும். மேலும், இந்த உலர் பழம் மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.