நீரிழிவு நோய் தணிய, காயங்கள் வேகமாக ஆற, நரை முடி கருக்க கறிவேப்பிலை...

நீரிழிவு நோய் தணிய, காயங்கள் வேகமாக ஆற, நரை முடி கருக்க கறிவேப்பிலை...

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் எப்படி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

கறிவேப்பிலை தாளிக்க பயன்படுத்தப்படும் அற்புதமான மூலிகை என்றாலும் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள சிறந்த மூலிகை. இதில் கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

அழகு பராமரிப்பில் தலைமுடி மற்றும் சருமம் பொலிவுடன் இருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இந்த கறிவேப்பிலை ஆயுர்வேதத்தில் எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது. 

கறிவேப்பிலையில் என்ன இருக்கு?

• ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
இது வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.

• அதிகப்படியான செரிமான சாறுகள் சுரப்பதை மிச்சப்படுத்தும்.

• இது பெப்டிக் அல்சரை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

• சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

• ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவை சரி செய்ய உதவுகிறது.

• புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கல்லீரலை பாதுகாக்கிறது.

• வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் வளமான ஆதாரம்.

• இரும்பு, தயாமின், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் சி, கரோட்டின் மற்றும் ஆக்ஸாலி அமிலம் அடங்கியுள்ளது.

• தினசரி கறிவேப்பிலை எடுப்பது முடி நரைப்பதை தடுக்கிறது.

• முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது.

• இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

• வாந்தியை தடுத்து நிறுத்துகிறது.

• நினைவாற்றலை அதிகரிக்கிறது.

• பசியை ஊக்குவிக்கிறது.

• நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

• எடை இழப்புக்கு உதவுகிறது.

• பருக்களை எதிர்த்து போராடுகிறது.

• பளபளப்பான சருமத்துக்கு சிறந்தது.

•காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

வாந்தியை தடுக்க கறிவேப்பிலை எப்படி எடுப்பது :

கறிவேப்பிலையை சுத்தம் செய்து அரை கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அதன் சாற்றை வடிகட்டி குடிக்கவும். இது வாந்தியை உடனடியாக நிறுத்தும். கர்ப்பிணிகள் மோரில் 2 டீஸ்பூன் கறிவேப்பிலை சாற்றை கலந்து குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலை :

நெய்யை சூடாக்கி கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். அவை கொதிக்கும் பருவத்தில் இறக்கி குளிரபடுத்தவும். பிறகு இதை சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிடவும். இது பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குழந்தைகளுக்கு கொடுக்கப்படும்.

நீரிழிவு குறைய கறிவேப்பிலை :

கறிவேப்பிலையை கழுவி வெயிலில் காய வைக்கவும். அதை பொடி செய்து வைக்கவும். பிறகு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த பொடியை 3-4 கிராம் அளவு காலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்கிறது. கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

கறிவேப்பிலை பொடியை நீரிழிவு நோயாளிகளால் 30 நாட்கள் வழக்கமாக உட்கொள்ளலாம். இதன் மூலம் நீரிழிவு குறையும் என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

* கறிவேப்பிலை 30 நாட்கள் தொடர்ந்து எடுப்பதால் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்.

* கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) அளவு குறையும்.

* யூரியா அளவு குறையும்.

* யூரிக் அமிலம் குறையும்.

* கிரியேட்டினின் அளவு குறையும். 

இவை எல்லாம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் நல பிரச்சினைகளை தள்ளிப் போட செய்கிறது.

வயிற்று கோளாறுகளுக்கு கறிவேப்பிலை :

வயிறு வலி, இரைப்பை பிரச்சனை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு கறிவேப்பிலை உதவும். கறிவேப்பிலையை எடுத்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நான்கில் ஒரு பங்கு அளவு குறையும் வரை கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.

காயங்கள் ஆறுவதற்கு கறிவேப்பிலை :

காயங்கள் ஆற்றுவதற்கு கறிவேப்பிலையை கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கழுவி விடவும். பிறகு தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவிடவும். பிறகு காயத்தை நன்றாக கழுவி விடவும். தினமும் செய்து வந்தால் காயம் விரைவில் குணமாகும்.