செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!!

கோவக்காய் என்றால் என்ன சில பேருக்கு இப்படி ஒரு காய் இருக்கானே தெரியாது. இவை பெரும்பாலும் காட்டுப்பகுதியிலும் முள்புதல்களிலும் படர்ந்து இருக்கும்.மேலும் கோவக்காய் என்பது உணவாகப் பயன்படும் கொடி வகையை சார்ந்தது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கோவைக்காய் மற்றும் பழம் உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு பல்வேறு மருத்துவப் பயன்களும் உண்டு. கோவக்காயை பெரும்பாலும் பொறியல் செய்து சாப்பிடுவார். உடலில் உள்ள இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் இதற்கு உண்டு.

மூலிகைகளின் மருத்துவக் குணங்களை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள் ஆவார். இவை வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்களை சாப்பிட பறவையினங்கள் பறந்தோடிவரும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு நால்வகையாய் பிரிப்பர்.மூவிரல் கோவை ஐவிரல் கோவை நாமக்கோவை, கருங்கோவை ஆகியவை.இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை சிலபேர் தொண்டைக்கொடி என அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக் கோவை என இருவகைகளாக உள்ளது.
 
இந்நிலையில் கோவக்காய் கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை இருக்கிறது. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் குடித்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும். மேலும் தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி சூடு ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
 
இதைத்தொடர்ந்து இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மன வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும். கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம் . கோவக்காய் சாப்பிட்டால் நீண்ட நாளுடன் நோய் நொடி இல்லாமல் வாழலாம்