இருதய இரத்த குழாய் அடைப்புகளை இயற்கை மருந்துகளால் நீக்க முடியுமா...?

இருதய இரத்த குழாய் அடைப்புகளை இயற்கை மருந்துகளால் நீக்க முடியுமா...?

இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் இரத்தஓட்டம் நடைபெறுகிறது.

இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்கும்.

கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக் காரணமாகிறது. இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதாரணமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்கி விடலாம்.

இயற்கை மருந்து தயாரிக்க: 
1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் புண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு தேக்க​ரண்டி அருந்தி வந்தால், இது பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையாகும்.