மூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...?

மூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...?

மூக்கிரட்டை கீரையை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி வாரம் ஒரு முறை குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் நன்கு பலம் பெறும்.

பல்வேறு காரணங்களால் சிலருக்கு கண் பார்வையில் தெளிவின்மை, கிட்டப்பார்வை மற்றும் இன்னபிற ஏற்படுகின்றன. மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் கண்களும் ரொம்ப தெளிவாக தெரியும்

ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்த நீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். யூரின் இன்பெக்சன் என்று சொல்லப்படும் கிருமித் தொற்று வரும் பிரச்சினையை மூக்கிரட்டை கீரை ஒரே நாளில் சரி செய்கின்றது.

சிலருக்கு காலையில் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகின்றது தினமும் மூக்கிரட்டை கீரையை கூட்டு போன்று செய்யும்போது அதில் மஞ்சள், சீரகம் போன்ற பொருள்களையும் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் செரிமான சக்தியை மேம்படுத்தலாம்.

மூக்கிரட்டை கீரையை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்கும்.

மாதம் ஒருமுறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து பொடி செய்து நீரில் வேக வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும் 

உணவுகளை அதிகம் உண்பதால் சாப்பிட்ட உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமை உடலின் தசைகளில் கொழுப்பு அதிகம் படிந்து உடல் பருமன் ஏற்படுகின்றது மூக்கிரட்டை கீரை மற்றும் தண்டுகளின் கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகம் இருக்கிறது 

கீரையை கடையில் செய்து சாப்பிட்டு வருவதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க முடியும்.