கோபுரந்தாங்கி மூலிகை

கோபுரந்தாங்கி மூலிகை

உடைந்து நொறுங்கிய  எலும்புகள் யாவையும் ஒரே மாதத்தில்  ஒட்டவைத்து படுக்கையில் கிடந்தவரையும் பாய்ந்து ஓடவைக்கும் அற்புத காயசித்தி மூலிகையே கோபுரம்தாங்கி.

நமது உடம்பாகிய ஆலய கோபுரத்தை  ஆணிவேராக  தாங்கி நிற்பது எலும்பு மற்றும் நரம்பு மண்டலங்களே ஆகும். 

 அத்தகைய எலும்பு மற்றும்  நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அனைத்துவித பாதிப்புகளையும்  சரிசெய்து நமது உடம்பு  ஆலயம் போன்று  உறுதியான வஜ்ரதேகமாகய்  உருப்பெற  ஓரிதழ் தாமரை செடியின் வேர் எட்டும் கோபுரந்தாங்கியின் வேர் ஒன்றுமென ஐம்பது மில்லி வெள்ளாட்டுப்பாலில் அரைத்து  காலைமாலையென பத்தியமுடன் ஒருமாதம் உள்மருந்தாக சாப்பிடுவதுடன் பாதிப்படைந்த பகுதிக்கு வெளிபூச்சாக இதனியிலையுடன்  நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு சோற்றுக்கற்றாழை  ஓரிதழ்இலை உளுத்தமாவுடன் சிறிது
நல்லெண்ணெய் சேர்த்து வெளிப்பூச்சாக பூசி சல்லாத்துணி கொண்டு தளர்வாக கட்டி தொடர்ந்து நல்லெண்ணெய் ஊற்றிவர ஒரேமாதத்தில்  நொறுங்கி சிதறிய எலும்புகள் யாவும் ஒன்று சேர்ந்துவிடும்.  இம்மூலிகையை தினமும் காலை மாலை ஐந்துயிழையளவு  வெறும் வயிற்றில் வாயினிற் அடக்கி  உமிழ்நீருடன் கலந்த சாற்றை முழுங்கிவர பலவீனமாய் உள்ள  பற்கள் எலும்பு நகம் நரம்பு ஆகியவன  மிகவிரைவில் அதிக பலம்பெற்று ஆலய கோபுரம் போன்று நமது உடம்பினை உறுதியான மீள்உருவாக்கம் செய்வதுடன்  முக்கியமாக தண்டுவட மற்றும் மூட்டு  தேய்மானம் உள்ளவர்கள்  இதன் வேரின்சாரை கொதிக்கவைத்து உள்ளுக்குள் குடித்துவர தேய்ந்துள்ள எலும்புகள் யாவும்  தன்னைத்தானே சரிசெய்து கொண்டுவிடும் மற்றும் இதனிலையுடன் பெருநெருஞ்சில் கொட்டைக்கரந்தை சமன் கலந்து குடித்துவர சிறுநீரக குற்றங்கள் யாவும் தீர்ந்து உள்ளம்பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயமென சூட்சமமாய்

 எலும்புதேய்மானத்திலிருந்து மனிதர்களை காக்கும் மூலத்தை சொன்ன திருமூலரின் கூற்றை  அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்து  நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணரவைப்பதே ஆயிரம் கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும்  புண்ணியத்தை விடவும்  மேலானபுண்ணியமென  சொன்ன திருமூலரின் திருவடி போற்றுவோம்.