ராகி உருண்டை தினமும் சாப்பிடுங்க! நன்மைகள் ஏராளம்!

ராகி உருண்டை தினமும் சாப்பிடுங்க! நன்மைகள் ஏராளம்!

ராகி உருண்டையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ராகி உருண்டை பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. இது அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. மாறாக இதை கடித்து சாப்பிட முடியாது, விழுங்க வேண்டும். இதனால் ராகி உருண்டையை சாப்பிட பலரும் தவிப்பார்கள்.

இந்த ராகி உருண்டையை கோடை காலத்தில் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க :

ராகியில் காணப்படும் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய அமினோ ஆசிட்டுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.

எடை குறைக்க :

தினமும் ராகி உருண்டையை சாப்பிட்டால் இதில் உள்ள அமினோ ஆசிட்டுகளான ட்ரிப்டோஃபன், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும். இதனால் தொப்பை குறைந்து, அழகான தட்டையான வயிற்றைப் பெறலாம்.

உடல் சூட்டை தணிக்க :

கோடை வெயிலால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இக்காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்க ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறைந்து இதமாக இருக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த :

நீரிழிவு நோயாளிகளுக்கு ராகி உருண்டை மிகவும் நல்லது. அத்தகையவர்கள் இதை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் முற்றுவதை தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

எலும்புகள் வலுவடைய :

ராகி உருண்டையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்புகள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

ராகி உருண்டையில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் தொடர்ந்து இந்த ராகி உருண்டையை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரத்த சோகை :

ராகியில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்க்கொள்வோருக்கு உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

தைராய்டு பிரச்சினைக்கு :

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், குறிப்பாக ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், ராகி உருண்டையை தினமும் உடகொள்வது நல்லது.

மலச்சிக்கலை தடுக்க :

ராகி உருண்டையை தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

மேலும் குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களின் உடலில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கவும், பால் சுரப்பின் அளவை அதிகரிக்கவும், இந்த ராகி உருண்டை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இவ்வாறு ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது தான், நாம் விரும்பாத ராகி உருண்டை. எனவே அனைவரும் இதை உட்கொண்டு பயனடையுங்கள்.