மாட்டு சீம்பாலில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மாட்டு சீம்பாலில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
✍️நம் உடலுக்கு அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிக போஷாக்கையும் செறிந்து இருக்கும் இந்த சீம்பாலை மாடு கன்று ஈன்ற பின்னர் கிடைக்கும்.
✍️இதனை பயன்படுத்தி பால்கோவா செய்து உண்ணலாம் மற்றும் சீம்பால் பருகுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✍️சீம்பாலில் பார்க்கும் பொழுது மற்ற பாலில் கிடைக்கும் போஷாக்கை விட இதில் அதிகமே. சீம்பாலில் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்று நாம் தெரிந்து கொள்வோம்.
✍️மலச்சிக்கல் பிரச்சினைகளை ஈஸியாக குணமாக்கும் ஒரு அற்புத பொருள் சீம்பால்.
✍️குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஆசையாக சாப்பிடும் முறையில் சீம்பாலுடன் நாட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்க ருசியாக இருக்கும்.
✍️உடல் ஆரோக்கியமும் சரும பராமரிப்பும் மேம்படுத்தும் சீம்பால் :
சீம்பாலில் உள்ள புரதம் - வைட்டமின்கள் - கால்சியம் போன்றவை செறிந்து இருப்பதால் வயதானவர்கள் சீம்பால் அதிகம் பருகினால் அவர்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கோடுகள் மறையும் இளமையான ஒரு தோற்றத்தை பெறலாம்.
✍️அவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்புகளில் ஏற்படும் உபாதைகள் கால்சியம் குறைபாட்டால் வரும் வியாதிகளை தடுக்கும் உடல் சோர்வை நீக்கும் விதமாக இந்த சீம்பாலை பருகலாம்.
✍️நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த,
அதிகமாக கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சீம்பாலை பருகி அவர்களின் உடல் செயல் திறனுக்கு துணையாக இருக்கும்.
✍️கடினமான சாப்பாடுகளை சாப்பிட்ட பின்னர் அவை செரிக்க உதவும் வகையில் சீம்பால் பயன்படுகின்றது. விரைவில் உணவுகள் ஜீரணமடைந்து நீண்ட நேர உடல் உழைப்புக்கு உதவுகின்றது.