மாட்டு சீம்பாலில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மாட்டு சீம்பாலில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

✍️நம் உடலுக்கு அவசியமான  நோய் எதிர்ப்பு சக்தியையும்  அதிக போஷாக்கையும்  செறிந்து இருக்கும்  இந்த சீம்பாலை மாடு கன்று ஈன்ற பின்னர்  கிடைக்கும்.

✍️இதனை பயன்படுத்தி  பால்கோவா செய்து உண்ணலாம்  மற்றும் சீம்பால் பருகுவதால்  நமக்கு கிடைக்கும் பயன்கள்  பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  

✍️சீம்பாலில்  பார்க்கும் பொழுது மற்ற பாலில் கிடைக்கும்  போஷாக்கை விட இதில் அதிகமே. சீம்பாலில் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்று நாம்  தெரிந்து கொள்வோம்.

✍️மலச்சிக்கல் பிரச்சினைகளை ஈஸியாக  குணமாக்கும் ஒரு அற்புத பொருள் சீம்பால்.

✍️குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும்  ஆசையாக  சாப்பிடும் முறையில்  சீம்பாலுடன் நாட்டு  வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து  கொடுக்க ருசியாக  இருக்கும்.

✍️உடல் ஆரோக்கியமும் சரும பராமரிப்பும் மேம்படுத்தும் சீம்பால் :
சீம்பாலில் உள்ள  புரதம் - வைட்டமின்கள் - கால்சியம் போன்றவை செறிந்து  இருப்பதால் வயதானவர்கள் சீம்பால் அதிகம் பருகினால்  அவர்களின் முகத்தில் இருக்கும்  சுருக்கங்கள் கோடுகள் மறையும்  இளமையான ஒரு தோற்றத்தை பெறலாம்.

✍️அவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்புகளில் ஏற்படும் உபாதைகள்  கால்சியம் குறைபாட்டால்  வரும் வியாதிகளை  தடுக்கும்  உடல் சோர்வை நீக்கும்  விதமாக இந்த சீம்பாலை பருகலாம்.

✍️நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த,  
அதிகமாக கஷ்டப்பட்டு  வேலை செய்பவர்கள் மற்றும்  விளையாட்டு வீரர்கள் சீம்பாலை பருகி  அவர்களின் உடல் செயல் திறனுக்கு துணையாக இருக்கும். 

✍️கடினமான சாப்பாடுகளை சாப்பிட்ட  பின்னர் அவை செரிக்க உதவும் வகையில் சீம்பால் பயன்படுகின்றது. விரைவில் உணவுகள் ஜீரணமடைந்து   நீண்ட நேர உடல்  உழைப்புக்கு உதவுகின்றது.