அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

1. பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

2. அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

3. பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

4.இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்

5.பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொருமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

6. தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

7. மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலி வரும். பித்தம் அதிகமாகும்.

8.கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும். (நெய் சேர்த்து உண்ண வேண்டும்)

9. பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

10. முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

11. எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்

12.மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

13. மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

14. காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

15  டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

 16.எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

17. எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

18. உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

19.வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

20. குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், இரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தை உறுப்புகளை கோணலாக்கும்.

21.வெள்ளை பூண்டு அதிகமானால்- இரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.