வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் என்ன நன்மைகள்?

வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் என்ன நன்மைகள்?

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும்.

எலுமிச்சை பானம் தயாரிக்க தேவையான பொருட்கள் :

எலுமிச்சை - 6,

தண்ணீர் 1/2 லிட்டர், 

தேன் - தேவையான அளவு

எப்படி தயாரிப்பது?

முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். 10-15 நிமிடம் ஆறவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி கொஞ்சம் தேன் கலந்து குடிக்கவும்.

நன்மைகள் :

இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.