சிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டால் அறியலாம் நோயை...

சிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டால் அறியலாம் நோயை...

மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலரும் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம்.ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை கழிக்கலாம்.

இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம். நாம் சிறுநீரில் உள்ள பிரச்சினைகளை பரிசோதனை செய்து பார்க்கலாம்.ஆரம்ப காலத்தில் சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து ஒரு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறிது நேரம் கழித்து பாருங்கள்.

எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக உள்ளதை குறிக்கிறது.மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோயை குறிக்கிறது. சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்று கொண்டிருந்தால் கபம் அதிகமாக உள்ளது.

எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையுமாம். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகத் தாமதமாகும்.அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.

குறைவான சிறுநீர் உற்பத்திக்கான காரணங்கள், உடல் வறட்சி, தொற்றுகள், சிறுநீரக பாதை சுருக்கம், குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள், சிறுநீரக பிரச்சினைகள்,