கருந்துளசி...

 கருந்துளசி...

 

கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்த்தனர்.

சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் சேராங்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை. இதனை கிருஷ்ண துளசி, ஷ்யாம துளசி என்றும் அறியப்படலாம் 

# அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

# தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

# சிறிதளவு கருந்துளசியை எடுத்து பசும்பால் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளித் தொல்லை நீங்கும்.

# நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லையால் ஏற்படும் சளிக்கு தீர்வு கிடைக்கும்.

# தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

 

துளசியினால் குணமாகும் பிற முக்கிய வியாதிகள்:

1.  காக்கா (கால்கை) வலிப்பு

2. அனைத்து விதமான காய்ச்சல்கள் ( மலேரியா, ஃப்ளு )

3. தோல் சம்மந்தமான நோய்கள்

4. ஆண்மைக்கு