சர்க்கரை நோய் பாதம் எரிச்சல், சர்க்கரை நோய் பாத எரிச்சல்

 சர்க்கரை நோய் பாத எரிச்சல்

சர்க்கரை நோய் உள்ளவருக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது மிகவும் சகஜம். சர்க்கரை நோய் தொடர்ச்சியாக கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படும். அதற்கு ‘டயபடிக் நியுரோபதி’ (Diabetic Neuropathy) என்று பெயர். தமிழில் இதை ‘நரம்பு வலுவிழப்பு நோய்’ என்கிறார்கள். மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். 

 அப்போது கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்:

கால் மரத்துப்போகும்.

காலில் எரிச்சல் ஏற்படும்.

மதமதப்பு உண்டாகும்.

ஊசி குத்தும் வலி உண்டாகும்.

எரிச்சலும் வலியும் இரவில் அதிகமாக இருக்கும்.

பஞ்சு மேல் நடப்பதுபோலிருக்கும்.

பாதங்கள் குளிர்ந்திருக்கும்.

செருப்பு கழன்று போவதுகூட தெரியாத அளவுக்கு உணர்வு குறைந்து போகும்.

என்ன காரணம்?

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தச் சர்க்கரை எகிறும்போது, அந்தச் சர்க்கரையானது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும். காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புற நரம்புகள்தான். இந்த நரம்புகளை ‘சார்பிட்டால்’ பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.

மேலும், இவர்களுக்கு இரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான இரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரி்ச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன. பாதம் குளிர்ந்தும் போகிறது.

என்ன பரிசோதனை?

கால் நரம்பு பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கு ‘பயோதிசியோமெட்ரி’ (Biothesiometry) பரிசோதனை உதவுகிறது. பாதத்தில் முக்கியமான நரம்புகள் இருக்கிற ஆறு இடங்களில் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவை எப்படி இருக்கின்றன எனக் கண்டறியும் பரிசோதனை இது. இதன் முடிவுகள் பாதத்தில் எந்த நரம்பு, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவித்துவிடும்.

இரத்தசோகை கவனிக்க!

சர்க்கரை நோய் தவிர, கால் எரிச்சலுக்கு தமனி இரத்தக் குழாய் பாதிப்பு, இரத்தசோகை, வைட்டமின் பி6, பி12 பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை, உடற்பருமன், உயர் இரத்த அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடிப்பது, சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு பற்றாக்குறை, சில மருந்துகளின் பக்கவிளைவு எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு என்ன காரணத்தால் காலில் எரிச்சல் வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்ததா என்பதை அறிய ஹெச்பிஏ1சி பரிசோதனையையும் மேற்கொள்ளுங்கள். இதுவும் சரியாக இருந்தால், மற்ற காரணங்களுக்கான இரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, காரணம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கால் எரிச்சல் குறைந்துவிடும்.

என்ன சிகிச்சை?

பாத எரிச்சலைக் குணப்படுத்த வேண்டுமானால், முதலில் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது முக்கியம். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை டாக்டர் யோசனைப்படி மறுபரிசீலனை செய்து, அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை முறைப்படி பின்பற்ற வேண்டும். இரத்தச் சர்க்கரை அளவு, உணவு உண்டபின் 140 மி.கிராமுக்குக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தொடர்ந்து இரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்திருந்தால் மட்டுமே கால்வலி, எரிச்சல், மதமதப்பு போன்ற தொல்லைகள் குறையும். மேலும் உடலில் காணப்படும் மற்ற காரணங்களுக்கும் சிகிச்சை பெற வேண்டும்.


 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page