சர்க்கரை நோய் ஆரம்ப நிலை, சர்க்கரை நோய் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோய் அறிகுறிகள்

 சர்க்கரை நோய் ஆரம்பநிலை.. இந்த அறிகுறிகள் எல்லாம் சர்க்கரை நோய் ஆரம்பத்துக்கான அலாரமாகவும் இருக்கலாம்..

 

வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் மிகச்சரிய பொருத்தம் என்பது சர்க்கரை நோய்க்கு என்றே சொல்லலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்க்கலாம்.

 

சர்க்கரை நோய்

இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இவர்களுக்கு மாத்திரைகளும் ஊசிகளும் கட்டாயம்.

டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும்.ஆனால் மிக குறைவாக இருக்கும். இவர்கள் மாத்திரைகளோடு உணவு பழக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

உலகளவில் மற்ற நாடுகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட பரிசோதனையை உரிய இடைவெளியில் செய்துகொள்வதன் மூலம் சர்க்கரை நோயை வராமலும், வந்தாலும் கட்டுக்குள் வைக்கவும் முடியும்.

 

அதிகமான தாகம் வறட்சி

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலும் கூட அவ்வப்போது தொண்டையில் தாகம் எடுப்பது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும். உடலில் இருக்கும் திரவங்கள் அடிக்கடி வெளியேறுவதால் இழந்த நீரை ஈடுகட்ட அவசியமாகிறது. அதனால் தான் அதிக தாகம் உண்டாகிறது. சாதாரணமாக உடல் காய்ச்சலின் போது உடலில் நீர் வறட்சி உண்டாவதும், டீ ஹைட்ரேட் ஆவதும் உண்டு. ஆனால் தொடர்ந்து இந்த தாக உணர்வு இருக்குமானால் அவை கண்டிப்பாக சர்க்கரை நோய்க்கான தொடக்கத்தின் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. முதல் கட்ட பரிசோதனை செய்வது அவசியம்.

 

சிறுநீர் கழிக்க வேண்டும் உணர்வு

நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிப்பது சரி. ஆனால் அதற்கு அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் இதற்கான அறிகுறிதான். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது அவை இரத்த ஓட்டத்தில் திரவங்களின் அளவை அதிகரித்து சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் அதிக அளவு சிறுநீரை உறிஞ்சும் சிறுநீரகமானது சிறுநீரை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கும்.

சிலருக்கு சிறுநீர் தொற்றும் உண்டாகக் கூடும். மேலும் அதிக வறட்சியால் அதிக தண்ணீர் குடிக்க நேரும் போது அதிக சிறுநீர் கழிப்பதும் இயல்பு என்று பலரும் இதை நினைத்துவிடுகிறார்கள். ஆனால் இவை இரண்டுமே சர்க்கரை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி என்பதை உணர வேண்டும்.

 

சோர்வும் மந்தமும்

அவ்வப்போது பசி எடுப்பதும் சாப்பிட்டதும் களைப்பை உண்டாக்குவதும் கூட தொடக்க கால சர்க்கரை நோயின் அறிகுறி. உடலில் இருக்கும் நரம்புகள், திசுக்கள், இதயத்தசைகள், மூளை, நரம்பு மண்டலம் இரத்த ஓட்டத்தில் இருக்க கூடிய குளுக்கோஸை உறிஞ்ச இன்சுலின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும். அவை குறையும் பட்சத்தில் அவற்றால் சரிவர வேலை செய்ய முடியாது அதனால் உடல் சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் வரக்கூடும்.

எப்போதும் மந்தமாகவே இருப்பார்கள்.அவ்வபோது பசி எடுத்து அதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவோ குறையவோ செய்யும். இந்த சோர்வும் களைப்பும் எல்லா நேரமும் இருக்கும் என்பதால் இந்த அறிகுறியையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

 

கண் பார்வையில் மங்கல்

கண் பார்வை கூர்மையானவர்களுக்கு பார்வை திறன் மங்கலாக இருக்கும். பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு இவை மேலும் மங்கலான பார்வை குறைபாட்டை உண்டாக்கும். கண்களில் இருக்கும் ரெட்டினா பகுதியை பாதிக்கும். அறிகுறியை அலட்சியம் செய்தால் கண் பார்வையை மங்க செய்து தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும்.

பார்வை குறைபாடு என்று கண் மருத்துவரிடம் சென்றால் அவரே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவும் வலியுறுத்துவார். இதர அறிகுறிகளோடு பார்வையும் மங்கலாக இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.

 

ஆறாத காயம்

பொதுவாக உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் உடலே உள்ளிருக்கும் மருத்துவரை கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் காயங்களை ஆற்றக் கூடிய வேலையை தொடங்கும். அத்தகைய ஆற்றலை அளிக்க போதுமான இன்சுலின் சுரக்காத போது காயங்கள் ஆறுவதிலும் அதிக தாமதம் உண்டாகும்.

சர்க்கரை நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த காயத்தை ஆற செய்யாமல் அதிகப் படியாகவே தாக்க தொடங்கும். உடலில் இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். குறிப்பாக சருமத்தில் சாதாரணமாக உண்டாகக்கூடிய சிராய்ப்புகள் முதல் வெட்டு காயங்கள் வரை மெதுவாக ஆறும். அதனால் தான் சர்க்கரை நோயாளிகள் காயம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

 

மரத்துபோதலும் பூஞ்சை தொற்றும்

சர்க்கரை நோய்க்கான தொடக்க அறிகுறியில் இதுவும் ஒன்று. உள்ளங்கை, உள்ளங்கால் போன்றவை மரத்துப்போக தொடங்கும். சருமத்தில் அரிப்பு உண்டாகும். சிலருக்கு தேமல் போன்று பூஞ்சைத்தொற்று உண்டாகும். இதில் அரிப்பு ஏற்படும். கை, கால்களில் உணர்ச்சிகள் குறையும்.

மேற்கண்ட அறிகுறிகள் எல்லாமே சர்க்கரை நோய் உங்கள் உடலில் நுழைவாயிலில் நின்றதற்கான அறிகுறிகளே. அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சமயங்களில் இவை ஃப்ரீ டயாபட்டிக் ஆகவும் இருக்கலாம். அதாவது சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை. இவர்கள் சரியான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தால் வாழ்நாளில் சர்க்கரை நோயால் உண்டாகும் உபாதைகளை தவிர்த்துவிடலாம்.

 

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page