சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ...

சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ...

பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில்  இதன் பயன்பாடு  அதிகம் உள்ளது.

சர்க்கரை நோயாளிகளும் வரப்பிரசாதம்

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ  எளிதாக நம் வீட்டருகிலேயே கிடைக்கும், மூலிகை கடைகளிலும் காய்ந்த நிலையில் கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் பன்னீர் பூ கால் கிலோ வாங்கி கொள்ளுங்கள். இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.

பன்னீர் பூ ஊறல் நீர்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பன்னீர் பூ உள்ள தண்ணீரை வடி கட்டி வைத்து, பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும். இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும். நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.

கணையத்தின் பீட்டா செல்களை சரி செய்கிறது

பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது.

மாதம் ஒரு முறை சுகர் டெஸ்ட் செய்தாலே போதுமானது

தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைந்து விடும். நீங்கள் இதை சாப்பிட ஆரம்பித்ததும் மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை செய்து கொண்டாலே போதுமானது.