சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்...

சுத்தமான தேனை எப்படிக்  கண்டுபிடிக்கலாம்...

1. கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கூடுமானவரை 75-80%  கரையாமல், கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். கலப்பட தேன் 25% தான் டம்ளரின் அடியில் போயி அமரும்.

2. எவ்வளவு நாட்கள் ஆனாலும் எறும்பு மொய்க்காதாம்...

3. ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். மேலும் தேன் தடவிய பேப்பர் எளிதில் தீ பிடிக்காது. ஓர் மூலையில் தேனை தடவி ... விளக்கின் முனையில் காட்ட நெருப்பு பிடிக்காது. சாதாரண பேப்பர் உடனே எரியும். சுத்தம் இல்லாத தேனும் உடனே கருகி  எரிய ஆரம்பிக்கும் .

4. பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்லை என்றால்,

* தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு...

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்று அறிக...

5. சிறிது சுண்ணாம்பும், சிறிது தேன் இரண்டையும் உள்ளங்கையில் வைத்து சேர்த்து குழைத்தால் கையில் சூடு ஏறும் ... சூடு ஏறினால் தரமான தேன்...
இல்லையேல் போலி என்று அறிக...