அஜீரணம், நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் மோர்...

அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் மோர்...
 
மோர்.  இதனை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும்.

* அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதில் இஞ்சி சாறு சேர்க்கும் பொழுது இது வயிற்றுக்கு ஒரு சிறந்த உணவு.

* கார சார உணவு சாப்பிட்டால் அதன்பின் ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டால் உணவின் கடுமையினை நீக்கி விடும்.

* மோர் ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுக்கிறது.

* கால்சியம் சத்து அளிப்பது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 1000, 1200 மி.கி. கால்சியம் தேவைப்படுகின்றது. 1 கப் பாலில் 300 மி.கி. கால்சியம் சத்து உள்ளது. 1 கப் தயிரில் 420 மி.கி. கால்சியம் உள்ளது. 1 கப் மோரில் 250 மி.கி. கால்சியம் உள்ளது.

* உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து கழுவி எடுத்து விடுகின்றது.

* பொட்டாசியம், வைட்டமின் ‘பி’ சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை கூடுகின்றது. தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.

* கொழுப்பினை குறைக்கின்றது.

* இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.

* புற்று நோயை தவிர்க்கின்றது.

* உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.

* லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மோர் மிகவும் சிறந்தது.

அதிக கொழுப்பில்லாத பாலில் தயாரிக்கப்பட்ட தயிரில் உப்பு சேர்க்காமல் மோர் தயாரித்து அருந்துவது மிகவும் சிறந்தது.