கட்டுக்கொடி மூலிகை இயற்கை வயாகரா...
கட்டுக்கொடி மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள்...
கட்டுக்கொடி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி உமிழ்நீரை பெருக்கும். கட்டுக்கொடி இலையை கொட்டைப் பாக்களவு எடுத்து உண்டுவர சீதபேதி, மூலக்கடுப்பு குணமாகும்.
நீரிழிவு குணமாக
கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து காலை மாலை என இருவேளை உண்டுவர நீரிழிவு நோய், களைப்பு, அதீத தாகம், தேக எரிச்சல் குணமாகும்.
இரண்டையும் சூரணமாகவும் கலந்து சாப்பிடலாம்.
பெரும்பாடு தீர
கட்டுக்கொடி இலையை அரைத்து ஓரு எலுமிச்சை பழ அளவுக்கு எடுத்து தயிருடன் கலந்து பெண்களுக்கு கொடுக்க பெரும்பாடு தீரும். கட்டுக்கொடி இலையில் சாறு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து அப்படியே வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும்.
விந்து கட்ட, ஆண்மை பெருக
இந்த அல்வா போன்ற ஜெல்லை அதிகாலை வேளையில் சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீத கழிச்சல் குணமாகும். விந்தானது கட்டும். மூலநோய் குணமாகும். ஆண்மை பெருகும். நீர்கடுப்பு, உடல்சூடு, உடல் எரிச்சல் சரியாகும்.
இரத்தப் போக்கை நிறுத்த
கட்டுக்கொடி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஓரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு குணமாகும்.
பாலின நோய்களை சரி செய்ய
விந்து முந்துதல், நீர்த்துப்போன விந்துவை கட்டுப்படுத்தும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. ஆண், பெண் இருவர்களின் பாலுணர்வு சம்மந்தமான நோயை சரிசெய்யும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மூட்டுவலியையும் சரிசெய்யக் கூடியது.
உடல் வலிமையாக, பொலிவு பெற
உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. எலும்பு தசைகளையும் வலுப்படுத்தக் கூடியது. கட்டுக்கொடியை காலை, மாலை என இருவேளை 2 கிராம் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும். உடல் பொலிவும் பெறும்.