பல் நோய்களும் எளிமையான தீர்வும்...

பல் நோய்களும் தீர்வும் (;Dental caries)

பல் ஈறில் நீர் தேங்கி ரோகம் விளைவிப்பதே பல் நோய்கள். பற்களின் மீதுள்ள உணவுத் துணுக்குகளோடு உமிழ்நீரிலுள்ள பாஸ்பரஸ் சேர்ந்து பற்காரை (Cavity)  உண்டாகிறது.                                                  

பல் துலக்கும் போது ஈறுகளையும் நன்றாக தேய்த்துவிட வேண்டும்.

1.   இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பல்வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும்.

2.   3 -5 துளி சுக்குத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்துவிட்டு, பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி தீரும்.

3.   கற்பூரவல்லி இலை, துளசி இலை சேர்த்து மென்று, வலி உள்ள  இடத்தில் வைத்தழுத்திக் கொள்ள பல்வலி  நீங்கும்.

4.   200மிலி வெந்நீரில் 10 துளி சுக்குத் தைலமிட்டு வாய்கொப்புளிக்க பல்வலி கட்டுப்படும்.

5.   கண்டங்கத்திரி பழத்தை சுட்டுப் பொடியாக்கி, ஆடாதொடை இலையில் வைத்து சுருட்டு போல் புகைக்க பல்வலி, பல்கூச்சம்  தீரும்.

6.   எருக்கம்பாலைத் தொட்டு பல்சொத்தை, பல்நோய் உள்ள இடத்தில் பூச குணமாகும்.

7.   நுணா மரத்தின் முதிர்ந்த காய்களை உப்புநீரில் ஊற வைத்து உலர்த்தி, சுட்டுக் கரியாக்கி பல்துலக்கிவர பல்சொத்தை குணமாகும்.

8.   அரத்தை தூளை சம அளவு பல்பொடியுடன் கலந்து, பல் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்.

9.   கடுக்காய்தூளுடன் சம அளவு உப்புத்தூள் கலந்து பல்துலக்கிவர பல்வலி, ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.

10. இலவங்கபொடியை கொண்டு பல்வலி உள்ள இடத்தில் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்.

11. குடசப்பாலைபட்டை குடிநீர் செய்து வாய்கொப்புளிக்க பல்வலி தீரும்.

12. கொத்தமல்லி இலை அல்லது விதைகளை மென்று விதைக்குடிநீர்  செய்து வாய் கொப்புளித்துவர  பல்வலி, ஈறுவீக்கம், வாய்துர்நாற்றம்  நீங்கும்.

13. சாதிக்காய் எண்ணை 2துளி பல்வலி உள்ள இடத்தில் பூச குணமாகும்.

14. நந்தியாவட்டை வேர் சிறுதுண்டு மென்று துப்ப பல்வலி குணமாகும்.

15. தான்றிக்காய் தூள் கொண்டு பல்துலக்கிவர பல்வலி, பல்சொத்தை அணுகாது.

16. வேப்பம்பட்டையை குடிநீர்செய்து இளம்சூட்டில் வாய்கொப்புளிக்க பல்வலி தீரும்.

17. அரிவாள்மனைபூண்டுபூ 20, 2ல்1ன்றாய்க் காய்ச்சி வாய் கொப்புளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் கட்டுப்படும்.

18. துளசி இலையை கொதிக்க வைத்த நீரில் உப்புகலந்து வாய்கொப்புளிக்க பல்சொத்தை குணமாகும். ஈறு பலப்படும்.

19. நாயுருவி வேர்சூரணம் அல்லது வேர் கொண்டு பல் துலக்கிவர பற்கள் பலமடையும்.

20. கண்டங்கத்திரி பழத்தை பொடித்து, அனலிலிட்டு புகையை  வாயில் படும்படி புகை பிடிக்க  சொத்தைப்பல் குணமாகும். பல்வலி  குறையும்.

21. நஞ்சறுப்பான் இலைச்சூரணம் கொண்டு பல்துலக்க பற்கறை நீங்கும். பல் சுத்தமாகும்.

22. 1 கரண்டி துளசிச் சாற்றில் சிறிது கற்பூரம், கிராம்புத்தூள் கலந்து சொத்தைப் பல்லின் மேல் தடவ வலி குறையும். ஈறு வீக்கம்  நீங்கும்.

23. மாதுளம் பழத்தோடுடன் உப்பு கலந்து பல்துலக்க பல்வலி தீரும்.

24. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம, வாய்ப்புண் குணமாகும்.

25. கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி, வாய்புண்  குணமாகும்.

26. தான்றிக்காயை சுட்டு மேல்தோலை பொடித்து, சமன் சர்க்கரை சேர்த்து, தினமிருவேளை சாப்பிட்டுவர பல், ஈறு  சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

27. தான்றிதோட்டை கருக்கி பொடித்து, குடிநீர் செய்து, வாய் கொப்புளித்து வர பல்வீக்கம், பல்வலி தீரும்.

28. சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து சொத்தைப்பல்லில் வைக்க தீவிரமான வலியை கட்டுப்படுத்தும்.

29. பிரம்மதண்டு விதையை தீயில் புகைத்து வாயில் படச் செய்ய சொத்தைப்பல் குணமாகும். புழு செத்து விழும்.

30. ஆலம்பால் எடுத்து காலை மாலை தடவிவர பல்ஆட்டம் நிற்கும்.

31. ஆலம்விழுதைக் கொண்டு பல்துலக்கிவர பற்கள் பலப்படும்.

32. கருவேல்பட்டைக்குடிநீர் கொண்டு வாய் கொப்புளிக்க வாய்புண், பல் ஈறுஅழுகல், பல்ஆட்டம் தீரும்.

33. கருவேல்பட்டை, வாதுமைதோடு சமன் கருக்கிப் பொடித்து பல்துலக்கிவர பல் கூச்சம், ஈறுபுண், பல்வலி, பல்ஆட்டம்  தீரும்.

34. நுணாகாய், உப்பு சமன் சேர்த்து அடைதட்டி, புடமிட்டு, பற்பொடியாக்கி பயன்படுத்த  பற்கள்  பலமடையும்.

35. புளியங்கொட்டை தோல் கருவேலம்பட்டைதூள் சமன் கலந்து உப்புத்தூளுடன் பல்துலக்கி வர பல்கூச்சம், பல்ஆட்டம், சீழ், இரத்தம் வடிதல், ஈறுவீக்கம்  தீரும்.

36. மகிழங்காயை மென்று வாயிலடக்கி வைத்திருந்து துப்ப பல்ஆட்டம் நீங்கி உறுதிப்படும்.

37. கருவேலம் பற்பொடியில் பல்துலக்கி, மகிழ இலைக் கியாழத்தில் வாய் கொப்புளிக்க பல்நோய் அனைத்தும் தீரும்.

38. மாசிக்காய் தூளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்கொப்புளிக்க பல்நோய் தீர்ந்து ஈறு பலப்படும்.

39. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல் ஆட்டம் தீரும். 

40. புழுங்கலரிசியை 3 முறை கோவையிலை சாற்றில் ஊற வைத்து உலர்த்தி, நல்லெண்ணையில் பிசைந்து, வாயில் ஒதுக்கிக் கொள்ள பல்லீறில் சீழ், இரத்தம் காணல் நீங்கும்.

42. காலை வெறும் வயிற்றில் 3-4 எலுமிச்சம்பழத்தை உறிஞ்சிச் சாப்பிட ஈறில் இரத்தம் காணல் தீரும்.                                                   

43. எலுமிச்சை சாறுடன் நீர்கலந்து வாய் கொப்புளிக்க ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.

44. 1 பங்குஎலுமிச்சை சாறுடன் 2பங்கு பன்னீர் கலந்து காலை மாலை வாய் கொப்புளிக்க வாய்நாற்றம் நீங்கும்.                                               

45. 2 எலுமிச்சம்பழத்தை நறுக்கி காலை வெறும்வயிற்றில் உறிஞ்சிச் சாப்பிட பயோரியா வராது.                                                                            

46. இளம் அருகம்புல்லை மென்று சாற்றை பல்வலியுள்ள பக்கம் ஒதுக்கிவைக்க வலி நிற்கும்.தொடர்ந்து செய்ய பல் உறுதியாகும். 

47. தைவேளை வேரையும் அருகம்புல்லையும் நீர் விட்டிடித்து துணியில் முடிந்து பல்வலி இடப்புறம் இருந்தால் வலது காதிலும் வலப்புறமிருந்தால் இடக் காதிலும் 3 துளிவிட உடனே குணமாகும்.                                                              
48. கொய்யா கொழுந்தை மென்று வாயிலடக்க பல்வலி நிற்கும்.    

49. கொழுஞ்சிவேரை சாறுபிழிந்து பஞ்சில் தோய்த்து பூச்சி விழுந்த பல்லில் வைக்க வலி நிற்கும்.           
                                                  
50. வாய்விளங்கத்தை துணியில் முடிந்து கொதிக்க வைத்து, வலியுள்ள பல்லில் வைத்துப்படுக்க பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும்.  2-3 நாள் செய்ய பூச்சிகள் நீங்கி விடும்.

51. பெருங்காயத்தை எலுமிச்சைச் சாற்றிலுரைத்து பஞ்சில் தோய்த்து வைக்க பல்வலி குணமாகும்.              
                                                                    
52. ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருக்க பல்வலி போகும்

53. சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய், இந்துப்பு சம அளவு இடித்து பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, அனைத்தும் நீங்கும்.

54. புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு வற்ற காய்ச்சி ,கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி கொழகொழ வென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி, தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

55. கோவைப்பழம் சாப்பிட பல் வலி நீங்கும்.

56. தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

57. மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

58. பசுஞ்சாண வரட்டி சாம்பல் கொண்டு பற்களைத் துலக்க, பற்கள் வெண்மையாக இருப்பதோடு, பற்களை அழித்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, வாயில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, பற்களுக்கு நல்ல பாதுகாப்புத் தரும்.

59.  மல்லி விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்க பல்கூச்சம் மறையும்.

60.  கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

61.  புதினா விதையை வாயில் போட்டு மெல்ல பல் கூச்சம் மறையும்.

62.    புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்க பல்கூச்சம் குணமாகும்.

63.  துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர பல்வலி குறையும்.

64. 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1 துளி கிராம்பு எண்ணெய், 1 துளி டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வாயில் ஊற்றி 20 நிமிடம் கொப்பளிக்க, பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

65. தைவேளை அருகம்புல் இரண்டையும் தட்டி சாறு எடுத்து பல் வலிக்கும் எதிர் காதில் மூன்று துளி பிழிய முகவாதம், தந்தரோகம் ஒரு தலைவலி குணமாகும்.

66.வெள்ளருகு மூலிகையின் இலைகளை மையாக அரைத்து அதன் நடுவில் ஒரு சிறிய உப்புகல்லை வைத்து பல் வலி உள்ள பல்லில் வைத்து விட வலி நீங்கும்.