நார்ச்சத்தும் பிரண்டை உப்பும் இணைந்து செய்யும் எடை குறைப்பு அற்புதம்

நார்ச்சத்தும் பிரண்டை உப்பும் இணைந்து செய்யும் எடை குறைப்பு அற்புதம்


உடல் எடையை எவ்வாறு குறைப்பது? எவ்வளவு நாளில் குறைப்பது? என்பது பற்றி நம்முடைய கடந்த சரியான எடை குறைப்பு வழி முறைகள் பதிவில் மிக விரிவாக பார்த்தோம். அதன் இணைப்பை இங்கே கொடுத்துள்ளோம்


நீங்கள் பிரண்டை உப்பையும் மற்றும் மேற்சொன்ன வழிமுறைகளையும் பின்பற்றி எடை குறைத்தவராகவும் இருக்கலாம் அல்லது முயற்சி செய்து கொண்டு இருப்பவராகவும் இருக்கலாம். நாங்கள் மேற்கண்ட பதிவில் கூறியது போல உடல்குறைப்பிற்கு நார்ச்சத்து மிக மிக மிக அவசியம்.

நார்ச்சத்து என்ன செய்கிறது

அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது. அதாவது பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறதோ அதுவேதான் நம் உடலிலும் நடக்கிறது. நீங்கள் வெறுமனே பிரண்டை உப்பு சாப்பிட்டிருந்தாலும் அல்லது வேறு உடல் குறைப்பு மூலிகைகளை சாப்பிட்டிருந்தாலும் அவை அனைத்துமே நம் உடலின் கொழுப்பை கரைத்து உடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க மட்டுமே செய்யும். இந்த கரைந்த கொழுப்பை நம் உடலை விட்டு வெளியேற்றுவதற்கு நார்ச்சத்து தேவை. ( உதாரணத்திற்கு: நம் வீடுகளில் அதிகப்படியான கொழுப்பு (கூடுதலாக எண்ணெய் அல்லது NON-VEG) சமைத்த கடாயை விலக்குவதற்கு வெறுமனே சோப்பு திரவங்கள் மட்டும் பத்தாது, கூடவே நார் போன்ற பொருளை வைத்து தேய்த்தால்தான் கொழுப்பு முழுவதுமாக கடாயை விட்டு வெளியேறும். இதையே நம் உடம்பிற்கும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.)

நார்ச்சத்து சேர்க்காவிட்டால் குதிரைக் கொம்புதான்

நார்ச்சத்தை நீங்கள் போதுமான அளவில் சாப்பிடாமல் என்னதான் முயற்சி செய்தாலும் உடல்எடை குறைப்பு என்பது குதிரைக் கொம்புதான். அதனால் தான் நம்முடைய எல்லா பதிவுகளிலும் நார்ச்சத்திற்கான முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் கொண்டே இருப்போம்.

துல்லியமான அளவில் நார்ச்சத்து

ஆனாலும் போதுமான நார்ச்சத்தை எவ்வாறு சரியான அளவில் உணவில் சேர்ப்பது என்பது அனைவருக்கும் சற்று குழப்பமாகவே இருந்து வருகிறது. பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் மூலம் நமக்கு தினசரி தேவையான நார்ச்சத்தை இயற்கையான முறையிலும், நமது உடலுக்கு தேவையான அளவு துல்லியமாகவும் (கிராம் அளவில்) எடுத்துக் கொண்டு மிக விரைவாக உடல் எடை குறைப்பை செய்யமுடியும்.


அனுபவப்பூர்வமாக வெற்றி பெற்ற முறை
 
மேற்குறிப்பிட்ட முறை எங்கள் வாடிக்கையாளர்கள் எடை குறைப்பில் அனுபவப் பூர்வமாக செய்து பார்த்து வெற்றி பெற்ற முறையாகும். இதை அனைவருமே follow-up செய்து உங்களுடைய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்.