மூல நோய்க்கு பன்றி இறைச்சி
மூலத்திற்கு பன்றிக் கறி சாப்பிடலாமா? மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லாதது. மருந்தினால் சாதாரணமாக இதை குணப்படுத்த முடியும். ஏனென்றால், மூலம் என்பது ஒரு உறுப்பு சார்ந்த நோயல்ல. அது உடல் இயங்கியல் சார்ந்த பிரச்சினையின் குறிகுணம். எந்த நோய் ஏற்பட்டாலும் எப்படி அதை சரி செய்யலாம் என மனம் சிந்திக்கும். ஆனால் மூல நோய் வந்துவிட்டால் பிரமை பிடித்ததுபோல மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டு எந்த சிந்தனையும் செய்யத் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கத் தோன்றும். ‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்கிறார் வள்ளுவர். நோய் என்னவென்று ஆராய்ந்து பின் நோய்க்கான காரணம் இன்னதென்று அறிந்து அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே இது. மூலத்தின் அடிப்படைக் காரணங்களை அடியோடு களைவதன் மூலம்மூலநோயை ஒழிக்கலாம். மூலநோய் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்களாக, மலச்சிக்கல், மிகுந்த உடல் சூடு, மரபு முதலியவற்றை முன்பே கூறியிருந்தேன். எனவே அனைவருமே, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை மிகுதியாக ஏற்படும் உணவுப் பழக்க வழ