பக்கவாதம் சித்த மருத்துவம், பக்கவாதம் மூலிகை, paralysis cure treatment, paralysis cure in ayurveda, stroke cure medicine
பக்கவாத நோயும், சித்த மருத்துவ முறைகளும் இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்றும் ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன. 1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை. 2. ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும். 3. இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும். பக்கவாதத்திற்கு அடிப்படையான மூல காரணம் பக்கவாதநோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாக குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம். மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள