சர்க்கரை நோய் ஆரம்ப நிலை, சர்க்கரை நோய் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள், சர்க்கரை நோய் அறிகுறிகள்
சர்க்கரை நோய் ஆரம்பநிலை.. இந்த அறிகுறிகள் எல்லாம் சர்க்கரை நோய் ஆரம்பத்துக்கான அலாரமாகவும் இருக்கலாம்.. வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் மிகச்சரிய பொருத்தம் என்பது சர்க்கரை நோய்க்கு என்றே சொல்லலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோய் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இவர்களுக்கு மாத்திரைகளும் ஊசிகளும் கட்டாயம். டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும்.ஆனால் மிக குறைவாக இருக்கும். இவர்கள் மாத்திரைகளோடு உணவு பழக