கர்ப்பப்பை நீர்கட்டிகள்

கர்ப்பப்பை நீர்கட்டிகள் (pcod) பாதிப்பு மற்றும் தீா்வுகள் 



 
மாத விடாய் ஒரு பெண் பருவமடையும் போது ஆரம்பிக்கிறது. பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெண்ணின் இனப்பெருக்க சுழற்சியை நிறுத்துகிறது. மாதவிடாய் இரத்தப்போக்கு சேர்ந்து கருப்பை (கருப்பையக சவ்வின்) புறணி உதிர்தல் ஆகிறது. இது கர்ப்ப காலத்தில் தவிர, ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கை முழுவதும் சுமார் 400 முதல் 500 மாதாந்திர சுழற்சிகள் ஏற்படுகிறது

    இந்த மாதவிடாய் சுழற்சிகள் சாதாரணமாக சுமார் 25 முதல் 36 நாட்கள் வரை இருக்கும். பெண்கள் 10 முதல் 15% சரியாக 28 நாட்கள் என்று சுழற்சிகள் வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 20% பெண்களுக்கு , சுழற்சிகள் ஒழுங்கற்றதாக இருக்கின்றன. .  

   
மாதவிடாய் இரத்தப்போக்கு 5 நாட்கள் சராசரியாக, 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். ஒரு சுழற்சியின் போது இரத்த இழப்பு பொதுவாக ½ முதல் 2 1/2 அவுன்ஸ் வரை இருக்கின்றன.

  
மாதவிடாய் சுழற்சி சாதாரண உடலியல் பருவமாற்ற நிகழ்வுதான்.
 மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. LH மற்றும் FSH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பி மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன, இது தான் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை கருப்பைகளில் தூண்டுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பையை கருத்தரித்தலுக்கு ஊக்குவிக்கின்றன.    
 
கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.  “பாலி சிஸ்டிக் ஓவரிஎன்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.
    
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS)   

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst
எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.


இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹார்மோன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது. PCOD  என்பது PCOS-ன் முந்தைய நிலைதான்

கருப்பையில் கட்டிகள்,
இன்சுலின் செயல்திறன் பாதிப்பு,
குழந்தையின்மை,
ஒழுங்கற்ற மாதவிலக்கு  
இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள்
உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.. 


பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகள் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பின்) நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனாலும் ஒவியுலேசன் தடைப்படும்.
பொதுவான அறிகுறிகள்
சோர்வு
மனப்பதற்றம்
தூக்கமின்மை
குழப்பமான மனநிலை
மன அழுத்தம்

கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்       
உடல் எடை அதிகரிப்பு
முகப்பரு
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்
முகத்தில் ரோம வளர்ச்சி
முகத்தில் கரும்புள்ளி
மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்
சருமத்தில் மருக்கள்

உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள் 
ஓவரியில் கட்டிகள்
இன்சுலின் செயல்திறன் பாதிப்பு
குழந்தையின்மை
ஒழுங்கற்ற மாதவிலக்கு
 ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு

காரணங்கள் 
       உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் மிகக் குறைந்த அளவில் ஆன்ட்ரோஜென் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது சினைப்பையில் முட்டை உருவாதல் பாதிக்கப்பட்டு, சீரற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரத்தலும்கூட ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. தவிர, மரபியல் ரீதியாக அம்மாவுக்கு இருந்தால்கூட பெண்ணுக்கும் பி.சி..எஸ். ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறும்போது சினைப்பை அல்லது கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

தடுக்க
உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்.

உடல் எடை
இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

உணவுப் பழக்கம்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, உணவில் கார்போஹைட்ரேட் சத்து அதிக அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மொத்தமாக கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்துவிட வேண்டாம். அதற்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதால், செரிமானத்தைத் தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படும்இது இன்சுலின் அதிக அளவில் சுரந்து ஆன்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுப்பதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம்  நீர்க்கட்டிகள்  இருந்தால் அறிந்து கொள்ள முடியும் மற்றும் நீங்கள் இருந்து  சினைப்பையில் முட்டை உற்பத்தி அளவு, வெளியேற்றம் பற்றியும்அறிந்து கொள்ள முடியும்.இரத்த பரிசோதனைகள்,  FSH, LH மூலம் PCOS பிரச்னை அறிய  முடியும்.(LH / FSH விகிதம் - இந்த விகிதம் பொதுவாக பெண்களுக்கு  1:1 இருக்க வேண்டும்., ஆனால் PCOS பெண்களுக்கு இந்த விகிதம்  அதிகமாக 2:1 அல்லது 3:1 என்ற விகிதத்தில்இருக்கும்.) 
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள 

  1.   பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். து இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படுத்தும்
  2.   முடிந்தவரை சுத்தமான சாப்பாடுகளை சாப்பிட வேண்டும்
  3.   ஓட்ஸ்,தினை,முளைக்கீரை, போன்ற ஆக்ஸிஜனேற்ற (antioxidants)     அதிக அளவு கொண்ட உணவுகளை எடுத்து வேண்டும்
  4.   உருளைக்கிழங்கு, அரிசி, வெள்ளை suger மற்றும் பாஸ்தா போன்ற எளிய கார்போஹைட்ரேட் தவிர்க்க வேண்டும்.
  5.   தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
  6.   பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
    7.     
சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவு எடுத்துக்கொள்வதும் நல்லது.
   8.      
மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும்.
   9.     
சிறிய வெங்காயமும் தினசரி 50 கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் PCOD பிரச்சினையை போக்கிட உதவும்.

  10.
கீரைகள் -
         குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவுதினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதில் சோம்பல்  வேண்டாம். குறிப்பாய் பசலை, முருங்கை, அரைக்கீரைஇவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவ பாடல் கூறுகிறதுமகவிற்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

     
தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப்பருப்பு இவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினை களைக் குறைக்க கண்டிப்பாக உதவிடும்.

போகம் விளைவிக்கும் கீரைகள் என சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவேளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றை கண்டிப்பாய்ச் சமைத்து சாப்பிட வேண்டும்.

    
குழந்தைப் பேறு நெடு நாளாகத் தள்ளிப்போகும் மகளிர், கொத்துமல்லி கீரை 2 ஸ்பூன் அளவில், டீ ஸ்பூன் அளவில் வெந்தயம் சேர்த்து இளங்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது

           
பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம்சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும்உணவில் மீன்கள், கடல் கல்லுப்புஅகர்அகர்எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.
 
     உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து மருத்துவம் செய்வித்துக் கொள்வது அவசியம்அதிகம் கடுகு, முட்டைகோஸ் எடுப்பதும் தைராய்டு அளவைக் குறைக்கக் கூடும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.
 
 உணவில் அதிக முளைகட்டிய பயறு வகைகளும், இலவங்கப்பட்டை, சாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களுடன் நிறைய சேர்க்கவேண்டும்.
        
 
புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவிற்கு விந்து அணுக்களை அதிகரிக்கவும் இதன் இயக்கத்தை கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கிறது இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்கூடியவரை வீட்டில் தயாரித்த, எண்ணெய் சத்து அதிகமில்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முதலிடம் கொடுங்கள். ரெடிமேட் உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது.

      
கருத்தரிக்க முயலும் போது, காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
 
மாதுளை ஸ்மூத்தி : மாதுளையில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை தினமும் பருகி வர வேண்டும். இதனால் விரைவில் கர்ப்பமாகலாம்.

சால்மன் க்ரில் : கருத்தரிப்பதை அதிரிப்பதில் சால்மன் மீன் முதன்மையானது. அதிலும் அந்த சால்மன் மீனை கழுவி, அதில் இஞ்சியை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்து, க்ரில் செய்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பசலைக் கீரை சாலட் : பசலைக் கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் நிநைந்துள்ளது. ஆகவே கேல் கீரையை சாலட் அல்லது கடைந்து சாப்பிடுவது விரைவில் கர்ப்பமாவதை உறுதியாக்கும்.

சீஸ் சாண்ட்விச் : சீஸில் பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான கால்சியம் சத்தானது அதிகம் இருப்பதால், இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது.

க்ரில்டு கடல் சிப்பி : கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்தது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் ஆயில், மிளகாய் தூள் மற்றும் பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் க்ரில் செய்து சாப்பிட்டால், சுவையுடன் இருப்பதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

மூலிகை ஜூஸ் : கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, மாலையில் குடித்து வந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சிக்கன் சாலட் : நன்கு வேக வைத்த சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். எனவே அந்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, அதில் கேல், பசலைக் கீரை மற்றும் லெட்யூஸ் போன்றவற்றை போட்டு ஒரு சாலட் போன்று செய்து, அதன் மேல் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பெண்கள் சாப்பட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இறால் : இறாலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. எனவே அந்த இறாலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் எலுமிச்சை சாறு, பூண்டு மற்றும் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் வறுத்து சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரித்து, எளிதில் கர்ப்பமாக முடியும்.
 
         சரியான உணவு, ஏதும் குறையிருப்பின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை எல்லாவற்றிற்கும் மேலாக சந்தோஷமான மனநிலை மற்றும் குடும்பச்சூழல், தேவைக்கேற்ற தனிமையும், நாளை நானும் நிச்சயம் தாய்மையடைவேன் எனும் நல்ல நம்பிக்கை இவையும் தேவைஇவை இருந்தாலே இயல்பாய் அது நிகழும்மகிழ்ச்சியும் மலரும்!

தவிர்க்க வேண்டிய உணவுகள்
காபி

கர்ப்பமாக இருக்கும் போதும், பிரசவத்திற்கு பின்னரும், ஏன் கருச்சிதைவு ஏற்பட்டாலும், காபி குடிப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் காபியின் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள், கருப்பைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்
கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், பெண்கள் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஃபாஸ்ட் ஃபுட்
கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை விட்டு பிட்சா, பர்க்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டால், மன அழுத்தம் தான் அதிகரிக்கும். எனவே இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் உணவுகள்
கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளில் ஒன்று தான் ஜங்க் உணவுகள். ஏனெனில் இந்த உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் நிறைந்திருப்பதால், பெண்கள் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.
   .  குறைந்த கார்போஹைட்ரேட் உணவு, அதிக புரதம் உணவுகளை சாப்பிட வேண்டும் .
 
அதே மேலும் சர்க்கரை, மற்றும் சில இயற்கையாகவே இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்ஒரு இனிப்பு  குறிப்பாக சாக்லேட், உங்கள் இனிப்பு உட்கொள்ளும் கட்டுப்படுத்த வேண்டும்,
 உடற்பயிற்சி, வலிமை பயிற்சி ஏரோபிக்ஸ் 6 நாட்களுக்கு அல்லது ஒரு வாரம்  குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும் .   எண்ணெய் பொறித்த மற்றும் குப்பை உணவு தவிர்க்க வேண்டும்.
 
 மருத்துவ முறை 
  1.கர்ப்பமாக பெற விரும்பவில்லை என்றால்  இது மாதவிலக்கு காலம் ஒழுங்குபடுத்த உதவுகிறது,


2. இது போன்ற கடுமையான சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு முக்கியமான ஒன்று தான்   

3.
இயற்கை மருத்துவரை அணுகி, இயற்கை மூலிகைகள் முலம் கருமுட்டை உற்பத்தியை விருத்தி செய்து pcod பிரச்சினையை சரி செய்ய முற்படலாம். .

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.