சர்க்கரை நோய் தணிய, கொலஸ்ட்ரால் குறைய, இரத்த சோகை சரியாக, மாதவிடாய் சுழற்சி சரியாக...

சர்க்கரை நோய் தணிய, கொலஸ்ட்ரால் குறைய, இரத்த சோகை சரியாக, மாதவிடாய் சுழற்சி சரியாக...

பொதுவாக மல்லி உணவின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், எனர்ஜி போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

 இவ்வளவு சத்துக்கள் நிறைந்த மல்லி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடிப்பது உடலுக்கு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.  

தற்போது அந்த நன்மைகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலும் விடுபடலாம். 

கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம் அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

அஜீரண பிரச்சினையில் இருந்து உடனடியாக விடுபட 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். முக்கியமாக உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது. 

இரவில் மலலி விதைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக்கப்பட்டு, மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

 கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி தடுக்கப்படும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சினையில் இருந்து விரைவில் விடுபடலாம்.